Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

துபாய் கோம்போ மீல்-1 (சவர்மா கடிக்க, சுலைமானி குடிக்க)

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை எல்லாம் சந்திக்கிறேன்...உங்களில் பல பேர் என்னை மறந்திருக்கலாம். புதியவர்களுக்கு என்னைத் தெரியாது...அமீரகப் பதிவர்களை மட்டும் அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்பினை பெற்றிருப்பதால் அவர்களுக்கு மட்டும் என்னைத் தெரிய வாய்ப்பிருக்கிறது..:-)

நான் ஒரு தொடர் பதிவர் அல்ல...எப்பவெல்லாம் தோணுதோ அப்போது தான் எழுதுவேன்...சில நேரங்களில் அது வருட இடைவெளியைக் கூட ஏற்படுத்தி விடுவதுண்டு...சமீபத்தின் இடைவேளையும் அப்படித்தான், முகப்புத்தகத்தின் இரண்டடி எழுத்துக்களில் கட்டுண்டு, அரட்டையும், கும்மியுமாக ஓடிய நாட்கள்... அமீரக தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகளில் நான் சற்று அதிகம் காட்டிய ஆர்வம், இவை எல்லாவற்றையும் விட என் இரண்டாவது மகளின் அன்பு இடையூரல்...ஒரு நிமிடம் சும்ம இருக்க மாட்டாள்...அதை இழுப்பது, இதை உடைப்பது, கம்ப்யூட்டரில் தண்ணீரை அள்ளி ஊற்றுவது, டீவி யை வயரைப் பிடித்து இழுத்து போட்டுவது இப்படி சேட்டைகள் ஏராளம்...

சமீபத்தில் எந்திரன் படத்தைப் பார்த்து விட்டு, என் மகளுக்கு பிடித்த ஒரே காட்சி,சிட்டி ரஜினிக்காந்த் டிவியைப் போட்டு உடைப்பது தான்...! படம் பார்த்து வந்ததிலிருந்து என் மகளுக்கு ஒரே கொண்டாட்டம் " வாப்பா டிவியை போட்டு உடைச்சிட்டாங்க...அவங்க டிவியை உடைச்சிட்டாங்கன்னு" அந்த வாரம் முழுதும் உற்சாகமாக சொல்லிக் கொண்டே இருந்தாள்...ஊரில் ஒரு டிவி ஏற்கனவே உடைத்த முன் அனுபவம் இருந்ததால், இங்கே இருக்கிற டிவியை காப்பாற்றுவது பெரிய பாடாகி விட்டது:-)

சமீபத்தில் அமீரகத்தில் ஒரு விழா முடிந்த தருவாயில் அதிகாலையிலேயே பதிவர் குசும்பன் என்னை அழைத்திருந்தார்...என்ன காலையிலேயே ? என்றேன்.

"சித்தப்பூ பேமிலி ஊரிலிருந்து வந்த பின்னும் எப்படி உங்களால் அமைப்புகளுக்காக இப்படி வீடியோ காட்சிகள் செய்ய முடிகிறது ?என்றார்"

அதை நான் செய்ய வில்லை என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணியதும் அவருக்கு பெருத்த சந்தோஷம்...அவருக்கு நான் செய்ததைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை, அவர் கவலை எல்லாம் என் சின்னப்பிள்ளையை வைத்துக் கொண்டு நான் எப்படி செய்தேன் என்பது தான்...
ஒய் ப்ளட் சேம் பிளட் :-)
(அவர் மகன் இனியவனை வைத்துக் கொண்டு அவர் படும் பாடு அவருக்குத் தெரியும் அல்லவா..?)

*************
பதிவில் நாம் எழுதியதெல்லாம் யார் படிக்கப் போகிறார்கள்..? என்ற எண்ணம் எனக்கு அவ்வப்போது ஏற்படுவதுண்டு, அதைத் தகற்கும் வகையில் அவ்வப்போது எனக்கு வரும் தனிமடல்கள் என் எழுத்து தீயிற்கு எண்ணெய் ஊற்றுவதாகவே அமையும்.

அந்த வகையில் சமீபத்தில் திருச்சி சையது வெளியிடப்போகும் "நட்புக்காக" சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 26 சிறந்த எழுத்தாளர்களின் கதைகளில், என் கதையான "சிறகு தொலைத்த சிட்டுக் குருவிகள்" இடம் பெறுவதுடன் அதற்கு அணிந்துரை எழுதிய பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழியல் துறைத் தலைவர் பேராசிரியர் எழில்வேந்தன் அனைத்து கதைகளிலும் இது முடி மணியாகத் திகழ்கிறது என்று பாராட்டியிருப்பது, மற்றும் என் கதைகளில் சிலவற்றைப் படித்த பிரபலங்களில் சிலரான பேராசிரியர் பெரியார் தாசன் அப்துல்லா, கவிச்சித்தர் மு. மேத்தா, காவியத்திலகம் ஜின்னாஹ் சரியுத்தீன் ஆகியோர் நீங்கள் கண்டிப்பாக சிறுகதைத் தொகுப்பு வெளியிட வேண்டுமென்று என்னிடம் உரிமையுடன் என்னிடம் கேட்டுக் கொண்டது, போன்ற நிகழ்வுகள் எனக்கு மேலும் மேலும் எழுத வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவே உள்ளது.

ஆனால் அதற்கான ஒரு நேர்த்தியான நேரம் கிடைக்காத வேளையில்,இந்த வெள்ளிக் கிழமை பதிவர் பாஸ்ட் பௌலர் நவ்பலுடன் பேசிக்கொண்டிருந்த போது, கிரிக்கெட் சம்பந்தமாக அவர் உட்பட சில பதிவர்கள் இணைந்து எழுதிவரும் "ஆடுகளம்" வலைப்பூவில் நீங்களும் எழுதுங்களேன்...என்று விளையாட்டாய் கேட்டது வினையாக மாறி விட்டது..:-) மீண்டும் அடித்தாட ஒரு வாய்ப்பு,

நாமலெல்லாம் சுனாமியிலேயே சும்மிங் போடறவங்க...சும்மிங் பூல் கிடைத்தா விடுவோமா..? ( எது இருக்கிறதோ இல்லையோ நாலு பஞ்ச் டைலாக் முக்கியம்..:-)) மீண்டும் இறங்கியாச்சு...( தேரை இழுத்து தெருவுலே விட்ட நவ்பல் போன்ற நண்பர்களுக்கு நன்றி...!) அடிச்சு ஆடுறதா ? இல்லை அடிவாங்கி ஓடுறதான்னு பார்க்கலாம்..:-)



ஆடுகளத்தில்....
******
ஆமா இதற்கு எதற்கு "துபாய் கோம்போ மீல்" என்று எதற்கு பேர் வைத்திருக்கிறாய்...சவர்மா, சுலைமானி என்று எதையும் கண்ணில் காட்ட வில்லையே? என்று கேட்பவர்களுக்கு, கொத்துபரோட்டா, டைரிகுறிப்பு, இந்த வரிசையில் இனி இதுவும் தொடர்ந்து வரும் கண்ணில் கண்ட செய்திகளுடன்....முன்பு எனக்களித்த அதே ஆதரவை மீண்டும் எதிர் நோக்கும்
உங்கள்......
கீழைராஸா பாலையிலிருந்து.....

பதிவர்கள் நடித்த குறும்(பு) படம் (காணொளியுடன்) 99% நகைச்சுவை கேரண்டி

"அண்ணாச்சி படத்தை எப்ப வெளியிடலாம்..?"

"டிசம்பர் 18"
அதிர்ந்து போனேன்...என்ன டிசம்பர் 18 ஆ...அவதார், வேட்டைக்காரன் படவெளியீடு என்று உலகத் திரைவுலகமே அதிர்ந்து கொண்டிருந்த
டிசம்பர் 18 இந்தக் குறும்(பு) படம் ரிலீஸா...? இவர் தெரிந்து சொல்கிறாரா...? இல்லை நம்மை நிராகதியாக்க திட்டம் போடுகிறாரா...?இருந்தாலும் துணிந்து ஏற்பாடுகளில் இறங்கினோம்...ஒருவாரம் நண்பர்கள் முகவை முகில், ஊமையன் ஹக்கிம், சிம்ம பாரதி மற்றும் ரியாஸ் பாய் ( கிறுக்கல்கள் ஜெஸீலா கணவர்) போன்றோரின் அயரா உழைப்பில் சத்திரம் திரையரங்கம் ஏ/சி தயார் செய்யப்பட்டது....


(போஸ்டர் வடிவமைப்பாளருக்கு ஆணிகள் சற்று அதிகமானதால் கடைசி நொடியில் இந்த போஸ்ட்டரை நானே வடிவமைக்க வேண்டியாதாயிற்று...என்ன எதோ பரவாயில்லையா?)
பதிவர்களுக்கு வழக்கம் போலக் குழுமத்தில் அண்ணாச்சி அழைப்பு விட எதிர்பாராத அளவிற்கு அமோக வரவேற்பு...( பதிவில் அழைப்பு விட திரையரங்கு அளவு இடம் தரவில்லை) பதிவர்கள் குடும்பத்தினருடன் சேர்த்து 30 பேர் முன்பதிவு செய்ய ஹவுஸ் புல் பலகை மாற்றப் பட்டது.என்றாலும் எனக்கு உள்ளுக்குள் ஒரு பயம்...அண்ணாச்சி இது சரி வருமா..? என்றேன்.
"கப்பித்தனமா பேசிக்கிட்டு இருக்காமே வேலையைப் பாருன்னு" சொல்லிட்டாரு...
2009 டிசம்பர் 18 வெள்ளிக்கிழமை...

12 மணிக்கே எல்லோரும் வந்து குழுமினர்...ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்னு நாங்க சொல்லிக்கிட்டு திரிந்தாலும் உண்மையில் வருகை தந்த பதிவர்கள் அதை நிருபித்தார்கள்...
இந்த முறை இஸ்மத் பாய் பிரியாணி சட்டியை ரியாஸ்பாய் கைப்பற்ற முயல பெரும் போராட்டத்திற்கு பின் இஸ்மத்பாயே பிரியாணிச் சட்டியை கைப்பற்றினார்.


(இந்த முறை சரி அடுத்த முறை நான் தான் ஆமா, என்று அமந்திருப்பவர் ரியாஸ் பாய், பிரியாணியுடன் வெற்றிகளிப்பில் அமர்ந்திருப்பவர் இஸ்மத் பாய்)
சரியாக 2:30 மணிக்கு படம் ஆரம்பிக்கப்பட்டது...பதிவர்களின் ஆரவாரத்துடன் 30 நிமிடங்கள் ஓடியது...எல்லோர் முகத்திலும் சந்தோசம். இதைத்தானே எதிர் பார்த்தது...படம் முடிந்ததும் பாராட்ட ஒன்று கூடிய பதிவர்கள் என்னைத் திக்குமுக்காட செய்ய ஒரு வழியாக எஸ்கேப்...( எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்! )

அடுத்து சில நிமிடங்களில் இதில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கையைச் சார்ந்த காவியப் புலவர் டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதன் பின் உரையாற்றிய அவர் தன் உரையில்,
“எத்தனையோ வேறுபாடுகளை நீங்கள் கொண்டிருந்தாலும் நீங்கள் இங்கு வந்து தமிழால் இணைந்திருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.இது போன்ற நிகழ்வுகளின் பதிவு எதிர்காலத்தில் எண்ணிப்பார்க்க இனிமையானது.இந்நிகழ்வில் நானும் ஒரு இளைஞனாக உங்களுடன் பங்கேற்றதில் என் வயதில் பாதி குறைந்தது போல் உணர்கிறேன். இதற்கு வாய்ப்பு தந்தமைக்கு உங்களுக்கு நன்றி” என்ற போது பதிவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.


சிறப்பு காட்சி முடிந்து வந்த பதிவர்கள் கூறுகையில் இந்த குறும்(பு)படம் கண்டிப்பாக அரைமணி நேர சிரிப்பிற்கு உத்தரவாதம் என்ற அந்த வார்த்தையில் என்னால் படத்தின் வெற்றியை உணரமுடிந்தது.
"உங்கள் திறன் இப்படிப்பட்ட விளையாட்டுப் படங்களுடன் நின்றுவிடாமல் கொஞ்சம் சீரியசாகவும் ஏதாவது இயக்க முயற்சி செய்யலாமே..?" என்பதே பெரும்பான்மையானோரின் கருத்தாக இருந்தது...கண்டிப்பாக உங்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் வெகுவிரைவில் அமீரகத்தை கதைக்களமாக வைத்து ஒரு தரமிக்க குறும்படமொன்றை இயக்கலாமென்றிருக்கிறேன்...செய்யலாமா? என்று மற்றவர்களும் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்...
வெற்றிப் படங்களைத்தரும் பெரிய இயக்குனர்கள் இயக்கியப் படத்தை கூட மற்றவர்கள் பார்த்து விமர்சித்த பின் தான் நாம் பார்க்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட உலகில், நான் ஒரு படம் செய்துள்ளேன் என்றதும் தெரிச்ச்சி ஒடாமல், நாங்களும் வருகிறோம் என்று வந்து, பார்த்து, வாழ்த்தி, பாராட்டி, என்னைத் திக்குமுக்காட வைத்த அனைத்து பதிவர்களுக்கும் மிக்க நன்றி....
உலக வரலாற்றில் முதல் முறையாக பதிவர்களுக்காக எடுக்கப்பட்ட படத்தை முதல் சிறப்புக் காட்சி கண்டு வரலாற்றில் தடம் பதித்தவர்கள்...
1)புலவர் ஜின்னாஹ் சர்புதீன்2) ஆசிப் மீரான் 3) குசும்பன்4) கீழை ராஸா 5) ஊமையன் ஹக்கிம்6) முகவை முகில் 7) கிளியனூர் இஸ்மத்8) ராஜாகமால் 9) நான் ஆதவன்10) செந்தில் வேலன்11) சந்திரசேகர் 12) சிம்ம பாரதி
13) ஜெஸீலா குடும்பத்தினருடன் 14) லியோ அண்ணன்15) ஆசாத் அண்ணன் 16) அபூ அப்ஸர் குடும்பத்தினருடன்17) சென்ஷி 18) ஜியாவுதீன் 19) சமீர்
20) பினாத்தல் சுரேஷ் அங்கிள் 21) கலையரசன்22) வினோத் கௌதம்
23) அன்புடன் மலிக்கா குடும்பத்தினருடன்24) கார்த்திக்கேயன்
25) ஹுசைனம்மா குடும்பத்தினருடன்.
"எந்தப்படமானாலும் பின்னி பெடலெடுத்து விமர்சனம் என்ற பெயரில் கிழிகிழியென்று கிழிக்கும் பதிவர்களை அழைத்து படத்தையும் போட்டு காட்டி, பதிவுலேயும் போட்டு விமர்சியுங்கள் என்கிறாயே உனக்கு என்னா தில்லு..?"ன்னு அண்ணாச்சி பக்கத்தில் இருந்து கேட்டுக்கிட்டிருக்காரு..
நல்ல படைப்புகளை பாராட்ட தெரிந்த ஒரு குழுவில் இதை சமர்பிக்கிறேன் பாராட்டினால் அது எங்கள் பாலைப்பதிவுக்கூடத்தைச் சாரும் ( கீழைராஸா, ஆசிப் மீரான், சிம்ம பாரதி, முகவை முகில், ஊமையன் ஹக்கிம்) விமர்சித்தால் அது அனைத்தும் என்னைச் சேரும்...இனி எழுத்து உங்கள் கையில்....








இதில் பார்க்க இயலாதவர்களுக்கு
தொடர்புடைய இடுகைகள்
ஊடகப்பார்வையில்
1)தினமலர் நாளிதழ்
2)அதிகாலை
3)முதுகுளத்துத்தூர்
பதிவுலகப்பார்வையில்
1) கிளியனூர் இஸ்மத்
2) ஹூசைனம்மா
3) குசும்பன்
4)அன்புடன் மலிக்கா

(உங்கள் விமர்சனமும் இதில் இணைக்கப்பட லிங்க் அனுப்பவும்)

வேட்டைக்காரனுக்கு இந்தப்படம் போட்டியா…? காணொளியுடன்…

"அண்ணாச்சி இந்த சுற்றுலாவை படமா எடுக்கலாமென்று இருக்கிறேன்"
என்று சொன்ன போது அண்ணாச்சி சிரிச்ச சிரிப்பை மறக்கவே முடியாது…அப்படி ஒரு சிரிப்பு…


“ஏண்டே அந்த சினிமாக்காரனுங்க தான் இப்படி எதாவது சொல்லிக்கிட்டு இருங்கானுங்கன்ன உனக்கு என்னங்கடே வந்தது…” என்று சொல்லி சிரிச்சுக்கிட்டே இருந்தாரு

அன்றைக்கு என் வாழ்க்கையிலே சில முக்கியமான முடிவுகளை எடுத்தேன்…
1)இன்னிக்கு சிரிக்கிற அண்ணாச்சி என்னைக்கும் சிரிச்சுக்கிட்டே இருக்கனும்…( இன்னா செய்தாரை ஒருத்தர் பாணியில்)
2)இன்னிக்கு சிரிக்கிற அண்ணாச்சியைப் பார்த்து ஊரே சிரிக்கனும்
3)இன்னிக்கு சிரிக்கிற அண்ணாச்சி ஊரைப்பார்த்து சிரிக்கனும்..

அதற்குப் பின்னால் “வெற்றி நிச்சயம்” என்ற பாடல் பிண்ணனியில் ஓட ஒரே பாடலில் ஒரு படத்தை முடித்து அண்ணாச்சி கிட்டேயே போட்டு காட்டினேன்…படத்தை பார்த்துட்டு கண் கலங்கிட்டாரு…
“ராஸா நீ கோடம்பாக்கத்துலே இருந்து எங்களை கொல்ல வேண்டியவண்டா...இவ்வளவு சீரிசா படத்தை எடுத்திருக்கேயடா"

என்றதும் தூக்கி வாரிப்போட்டது…அண்ணாச்சி என்னையே வச்சி காமெடி கீமடி பண்ணலேயேன்னு இது காமெடி படம் அண்ணாச்சி என்றேன் இருந்தாலும் அழுறதை நிறுத்தலே…

அதன் பின் அண்ணாச்சி என் அன்பு அண்ணன், அமீரகப் பதிவுலத் தந்தை , கட்ட(ட)த்துரை ( ஆர்க்கிடெக்ட்டுக்கு தாங்க நம்ம பசங்க அன்பா இப்படி ஒரு பேரை வச்சிருக்கானுங்க) எனக்கு கொடுத்த ஊக்கத்தை மறக்கவே இயலாது…



அதன் பின் ட்ரைலர் பண்ணாலாமென்று அவர் தான் ஊக்கமும் கொடுத்தார்…அந்த ஊக்கத்தின் பலன் தான் இந்த ட்ரைலர் பதிவு…
இதனால் விஜய் ரசிகர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது இது கண்டிப்பாக வேட்டைக்காரனுக்கு போட்டி அல்ல…

இந்தப்பட ஒளிப்பதிவில் என்னுடன் இணைந்து செயல் பட்ட நண்பன் முகவை முகில், ஊமையன் ஹக்கிம் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன் பதிவர்ச் சுற்றுலாவிற்கு வர இயலா விட்டாலும் இந்த ட்ரைலர் வெளியீட்டிற்கு போஸ்டர் வடிவமைத்து தந்த "பிரபல சினிமா போஸ்ட்டர் வடிவமைப்பாளர் சிம்ம பாரதிக்கு" என் அன்பு கலந்த நன்றி

இந்த வெளியீட்டிலும், சுற்றுலாவிலும் எந்த வித குறிக்கீடும் இல்லாமல் செயல் பட்டதற்கு (கலந்து கொள்ளாததற்கு) பி.ப.குசும்பனுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி… …

என்ன தான் அண்ணாச்சியை திட்டினாலும் "நல்லா இருங்கடே"ன்னு எல்லா உதவியும் வழங்கிக் கொண்டிருக்கும் அன்பு மிகு அண்ணாச்சிக்கு
நன்றி! நன்றி! நன்றி!

ட்ரைலரை இப்பப் பாருங்க… படம் டிசம்பர் 18….சார்ஜாவைத்தொடர்ந்து உலகெங்கும்...
மேலும் விபரங்களுக்கு….
http://asifmeeran.blogspot.com/2009/12/blog-post.html

துபாயா,அபிதாபியா,சார்ஜாவா..? அமீரக பதிவர்களின் இஃப்தார் ஓர் அலசல்...

இப்தார் முடிந்து மூன்று நாட்களாகியும் பதிவு வெளிவரவில்லை என்பதனால் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகி பதிவு "கந்தசாமி" படம் போல் கும்மப்பட்டு விடுமோ என்ற அச்சத்துடன் தான் ஆரம்பிக்கிறேன்.




இப்தார் ஆரம்பிச்சதிலிருந்து முடிந்த வரை நண்பர்கள் பக்கம் பக்கமாகப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்...இதிலே நாம என்னத்தை சொல்லபோறோம் என்று தோன்றினாலும், நண்பர்களின் சந்திப்பில் அவர்கள் அன்பில் திக்குமுக்காடி மகிழ்ந்த, நெகிழ்ந்த தருணங்களை சற்று வித்தியாசமான கோணத்தில் இந்நிகழ்வை ஒரு திரைக்கதை போல் சொன்னால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு தான் இந்தப்பதிவு...( ஏன் இந்த கொலைவெறி..? என்று கும்ம ரெடியாவது தெரிகிறது...எதா இருந்தாலும் படிச்சிட்டு கும்முங்க...கந்தசாமி படம் போல போஸ்டர் பார்த்துட்டு கும்முன வேலையெல்லாம் இங்கே வேணா ஆமா)

ஆகஸ்ட் 28 ஆம் தேதி, 2009 ஆம் வருடம்...
நேரம் மாலை :- 5-00
கூகுளில் உலகை வலம் வந்த கேமரா...துபாய்க்குள் புகுந்து சார்ஜாவின் சாலைகளை உயர்த்திலிருந்து கடந்து அண்ணாச்சி வசிப்பிடத்தை சூம் செய்கிறது...அது மிகுந்த வாகன நெரிசல் நிறைந்த ஒரு பகுதி...அடுக்கிவைத்த பெட்டிகளைப் போன்ற அப்பார்ட்மெண்ட்கள்...பல பக்கங்களிலிருந்து புறப்பட்ட வாகனங்கள் அண்ணாச்சி வீட்டை நோக்கி சீறிப்பாய்கின்றன...


நேரம் மாலை :- 5-01
இடம் :- அண்ணாச்சி வீடு
நபர்கள் : அண்ணாச்சி, குசும்பன், சென்ஷி

குசும்பன்:- அண்ணாச்சி எப்ப பிரியாணி வரும்...?
அண்ணாச்சி:- வேணாம்...வேணாம், அழுதுடுவேன்....

சென்ஷி: அட குசும்பன் அப்படி என்ன கேட்டு விட்டானென்று இப்படி பீல் கொடுக்குறீங்க..? பிரியாணி எப்ப வரும்னு கேட்டா பதில் சொல்ல வேண்டியது தானே...?

அண்ணாச்சி: சென்ஷி உனக்கு தெரியாது...நான் இப்தாருன்னு மெயில் போட்ட அன்னைக்கே வந்து வீட்டில் டேரா அடிச்சிக்கிட்டு...இதே கேள்வியை ரெண்டு நாளா மூச்சு திணற திணற கேட்டு சாவடிக்கிறான்...

குசும்பன்:- அண்ணாச்சி எப்ப பிரியாணி வரும்...?

சென்ஷி: ஆத்தாடி...அவனா நீ..?



நேரம் மாலை :- 5-05

இடம் :- கீழை ராஸாவின் கார்
நபர்கள் : கீழை ராஸா, கிளியனூர் இஸ்மத், சிம்ம பாரதி, கவிஞர் நாசர்
கீழை ராஸா: என்ன இஸ்மத் பாய் உங்களை மூணு மணிக்கு கிளம்பச்சொன்னேன். இப்படி லேட்டா வந்தா எப்படி..?

இஸ்மத் பாய்: ஏன் ராஸா சொல்ல மாட்டே...பேமுலியை ஊருக்கு அனுப்பி விட்டு நாளொரு விழா எடுத்துக்கிட்டு இருக்கே...நானு காலையிலே 11 மணியிலிருந்து இப்தார் வர பெர்மிசன் கேட்டு மல்லுக்கட்டிட்டேன் ..ம்ம்ஹூம் அசையலையே...இப்பதான் கையிலே கால்லே விழுந்து உத்தரவு வாங்கிக்கிட்டு வர்றேன்...நீ பேசுவே ராஸா பேசுவே...


கீழை ராஸா: (மனதுக்குள்) நல்ல வேளை இஸ்மத் பாய்க்கு நாம கதை தெரியலை... இந்த இப்தார் வர, ரெண்டு நாளா போன்லே பெர்மிசன் கேட்டு போராடுற விசயம்இவருக்கு எங்கே தெரியப் போகுது...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பீல் பண்ணுவதை உற்றுப்பார்த்த வாஹித்,

வாஹித்: என்ன ராஸா...அது தானே...
ராஸா : அதே தான்.... why blood...?

வாஹித் : Same Blood....( அவ்வ்வ்வ்)

(மீண்டும் பலவகையான வாகனங்கள் பல பக்கங்களிலிருந்து ஒரே திசையை நோக்கி வருவதை பலகோணங்களில், பலவித ஹாரன் ஒலி சத்தத்துடன் காட்டப்படுகிறது...



நேரம் மாலை :- 5-20
இடம் :- சார்ஜா அண்ணாச்சி வீட்டு முன்பு...

கீழைராஸாவின் கார் அண்ணாச்சி வீட்டு அருகாமையில் உள்ள தபால் அலுவலகம் முன்பு வந்தடைகிறது...பிண்ணனி இசையுடன் சத்தமில்லாமல் போனில் பேசிக்கொள்ள...

வண்டியிலிருந்து பிரியாணி, நோன்புக்கஞ்சி, சமோசா, மற்றும் இதரப்பொருட்கள் அண்ணாச்சி வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது...


கஞ்சி கலயத்தை குசும்பனும், சிம்ம பாரதியும் கஷ்டப்பட்டு தூக்கி செல்ல ...
பிரியாணிச் சட்டியை நான் ஆதவனும், கீழை ராஸாவும் நகற்றிச்செல்ல ..
இதர பொருட்களை , சென்ஷி, அண்ணாச்சி, கோபி, இஸ்மத் பாய், ராஜா காமால் ஆகியோர் எடுத்துச் செல்ல அவர்கள் வருசையாகச் செல்வதை டாப் ஆங்கிலில் காட்டப்பட்டு பிண்ணனி இசையில்...

( சுப்பிரமணியபுரம் "மதுரை குலுங்க குலுங்க ...இந்த மண்ணு மணக்கிற மல்லிகைப்பூ மனசை" என்ற மெட்டில் கீழ்கண்ட பாடல் ஒலிக்கிறது...

"சார்ஜா குலுங்க குலுங்க ஒரு சாகாஸம் பண்ணப்போறோம்...
துபாய் மணக்க மணக்க ஒரு இப்தாரு வைக்கப் போறோம்...

துபாய் மண்ணு மணக்கிற நோன்புக்கஞ்சி
சார்ஜா வீதி எடுத்துச் சொல்லும்
இங்கு வந்து குவிகின்ற பதிவர் வட்டம்
நல் பேரை எடுத்துச் செல்லும்..."

லிப்டில் ஏறி வலது பக்கம் திரும்பி கேமரா முன்னோக்கிச்செல்ல... அண்ணாச்சி வீடு அமர்க்களமாய் வரவேற்கிறது....


நேரம் மாலை :- 5-30
இடம்: அண்ணாச்சி வீடு

அதன் பின் செந்தில்வேலன், கார்த்திக்கேயன் வருகை...
பழங்களுடன் சகோதரி ஜெஸீலா குடும்பத்துடன் வருகை...
ஆசாத் அண்ணன், சுபைர், மற்றும் தினேஷ் வருகை....



இப்படி எல்லோரும் குழுமி... அந்த ஹால் ஒரு கல்யாண வீடு போல் கலை கட்டுகிறது...அண்ணாச்சி மலர்ந்த முகத்துடன் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருக்கிறார்...


கிச்சனை பெண்களுக்கு விட்டுக்கொடுக்காமல் இஸ்மத் பாயும், சிம்ம பாரதியும் ஆக்ரமித்திருந்தனர்..மற்ற நண்பர்கள் பம்பரமாய் சுழன்று ஹாலில் பதார்த்தங்களைப் பரப்புகின்றனர்...
ஒரு சில நிமிடங்களில் அந்த ஹால் பந்தி போல் மாற எல்லோரும் அவர்வர் இடத்தைப்பிடித்து அமர்கின்றனர்...
படகு பதிவர் குடும்பத்துடன் வருகை...
ஃபாஸ்ட் பௌலர் குடுமத்துடன் வருகை..
நண்பன் ஷாஜி, மற்றும் அண்ணன் லியோ வருகை
அப்போது சுல்தான் பாயும் வருகை தர அண்ணாச்சியும் சுல்தான் பாயும் உணவு தரச்சோதனையில் இறங்குகின்றனர்..



நேரம் மாலை :- 6-20
சுல்தான் பாய்: ஆசிப் உணவு வகைகள் சற்று அதிகமா இருக்குதோன்னு தோணுது...

அண்ணாச்சி: சுல்தான் பாய் நம்ம பசங்களை குறைச்சி எடை போட்டுடாதீங்க...அங்கே பாருங்க கலையரசன் முன்னாலே எடுத்து வச்சிக்கிட்டு இருக்கிற தட்டை...மொத்தமா ஆறு பேரு சாப்பிட வேண்டியதை அவன் ஒருத்தனே கைப்பற்றி இருக்கான்...குசும்பனைப் பாருங்க 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் விசில் கொடுக்க காத்திருப்பது போல காத்திருக்கான்...எனக்கு பயமெல்லாம் எங்கே இதுவெல்லாம் அவங்க பசிக்கு ஈடு கொடுக்காமே போயிடுமோ என்கிறது தான்...
சுல்தான் பாயின் கருணைப்பார்வை....
கலையரசனின் கழுகுப்பார்வை....
சுல்தான் பாய்: (மனதுக்குள்) நாம தான் தப்பா கணிச்சிட்டோமோ..??


நேரம் மாலை :- 6-25
ரகுவரன் போல் ஒருவர் வருகிறார்..."அட நம்ம பினாத்தல் சுரேஸ்"...என்று சென்ஷி ஓடிவந்து மரியாதை செய்கிறார்....மூத்த பதிவர்கள் அவரைச்சூழ 'பெரிய பழம் தின்று கொட்டை போட்ட பதிவர் போல' என்று மற்றவர்கள் ஆர்வத்துடன் பார்க்க, அவர் தான் "கவிமடதளபதி" என்பதை அறிந்து புதுப்பதிவர்கள் டரியலாகிறார்கள்....



நேரம் மாலை :- 6-30
அண்ணாச்சி டிவி ஐப் போடுகிறார்..சன் டிவி ஓடப்போகிறதென்று குசும்பன் ஆவலுடன் டிவி முன் அமர, துபாய் சேனலுக்கு டியூன் பண்ணுகிறார் அண்ணாச்சி... அதில் ஏதோ ஒரு சேனலில் பாங்கு சொல்ல, குசும்பனும், கலையரசனும் பாங்கு சொல்லியாச்சி, சொல்லியாச்சு என்றபடி குசும்பன் சமோசாவை வாய்க்குள் அழுத்த, கலையரசன் தர்பூசணியை திணிக்க...ஏனையோர் இது சரியான பாங்கு இல்லை என்று அமைதிகாக்க இருவர் முகத்திலும் ஈ ஆடவில்லை...
நேரம் மாலை :- 6-35
சுபைர் தோற்றத்தில் திடீர் மாற்றம்..முகத்தை பவ்வியமாக வைத்துக்கொண்டு...தொப்பியை வைத்துக்கொள்கிறார்...( எங்கே தான் இந்த நடிப்பு கலையை கற்றியோ என்று குசும்பன்...சுபைரை பார்க்க, சுபைர் இன்னும் குழந்தை போல் முகத்தை வைத்த படி தயாராகிறார்...

நேரம் மாலை :- 6-36

எங்கும் சலசலச் சத்தங்கள், அண்ணாச்சியின் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சத்தத்தில் கூட்டம் கப்சிப்...

நேரம் மாலை :- 6-40

எல்லோரும் அவரவருக்கு விருப்பமான உணவை கையில் எடுத்துக் கொள்கின்றனர்...

நேரம் மாலை :- 6-42

டி.வியில் இப்தார் நேரத்தை உணர்த்த பீரங்கி சத்தம் டமார் என்று ஒலிக்க...
ஸ்டார்ட்.... ( 10 நிமிடங்கள் சென்ஸார்)( திரைப்பட வரலாற்றில், திரைக்கதையில் சென்ஸாருக்கு இடம் ஒதுக்கியவன் நானாகத்தான் இருப்பேன்)

நேரம் மாலை :- 6-52
வடையுடன் வரவேண்டிய சுந்தர்...பழவகையுடன் வருகிறார்..

நேரம் மாலை :- 6-55
மக்ரீப் தொழுகை
நேரம் மாலை :- 7-00

அண்ணாச்சி நடுநிலை வகுக்க பதிவர்வட்டம் உருவாகிறது...அண்ணாச்சி மூலம் ஒவ்வருவராய் அறிமுகப்படலம்...( டாப் ஆங்கிலும் க்ளோசப்மாக அறிமுகப்படலம் நிறைவேற, ப்ராது விசாரனை ஆரம்பம்...



செந்தில் வேலன் மீது கொண்டு வரப்பட்ட ப்ராதுக்கும் பதிலளிக்கும் விதமாக,
செந்தில்வேலன்: பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட கந்த சாமி படத்தை கும்மியது தவறு..அது மற்றவர்களை படம் பார்க்க விடாமல் செய்கிறது.
பினாத்தல் சுரேஷ்:நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு தானே சொல்ல முடியும்...
செந்தில்வேலன்: அட்லீஸ் அதை உடனே பண்ணாதீங்க அட்லீஸ் ஒருவாரம் விட்டாவது ஆரம்பிங்க...இது போல செய்றதை உடனே நிறுத்தச்சொல்லுங்க...

கீழைராஸா: மூணு நாளா கண்ணு முழிச்சி, ஏண்டா பேயறைஞ்சவன் மாதிரி இருக்கேன்னு ஆபிசுலே, வீட்டுலே , நண்பர்க கிட்டே எல்லாம் திட்டு வாங்கி..கஷ்டப்பட்டு பதிவெழுதுனா...ஜார்ஜ் புஸ், சதாம் ஹுசைன்னு பல பேர்லே வந்து கும்மிட்டு போறாங்களே அதை நிறுத்தச் சொல்லுங்க ... நாங்க நிறுத்துறோம்....
குசும்பன்: (மனதுக்குள்) ஐயய்யோ நம்ம தலையிலே கையை வைக்கிறாரே...?
( சில நிமிடங்கள் மௌனப்படமாக சண்டை தொடர்கிறது...)
சில ப்ராதுகளுக்குப் பின்...
சகபதிவர் செந்திநாதனுக்கு அமீரக பதிவர்களின் பங்களிப்பு மற்றும் ஒற்றுமை குறித்து அண்ணாச்சி ஓரிரு வார்த்தைகள் பேசுகிறார்..
அடுத்து...
கவிஞர் நாசரின் ( ராஜா கமால்) "பூத்து மகிழும் பூக்கள்" கவிதைத் தொகுப்பை வெளியிட, அதன்பிரதிகளை, அண்ணாச்சி, நண்பன் ஷாஜி, சுல்தான் பாய், சகோதரி ஜெஸீலா ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்...



நேரம் மாலை :- 8-30
பிரியாணி படலம்...சில நொடிகளில் ஹால் தயார் செய்யப்படுகிறது...பிரியாணி சிக்கனுடன் அடுத்த சென்ஸார்...
நேரம் இரவு :- 9-00
அரட்டை தொடர்கிறது...ஒரு சிலர் விடை பெறும் நேரம்...உறவின் உன்னதம் பிரிவில் தான் தெரியும் என்பார்கள்...கூப்பிடும் தூரத்தில் இருந்தாலும் விடைபெறும் வேளை எல்லோர் முகத்திலும் கவலை...
இன்னும் சிறிது நேரத்தில் எல்லோரும் விடை பெற்று விடுவர்..ஆனால் இந்த சிலமணி நேர திருவிழா எல்லோர் மனதிலும் மறக்க முடியாத பாகத்துள் பதிவாகி விடப்போவதென்னவோ மறுக்க முடியாத உண்மை....
-கீழை ராஸா பாலையிலிருந்து....

விடைபெறுகிறார் அண்ணாச்சி..!

அன்று சூரிய கிரஹணம்...பிரபல ஜோதிடர்கள் கணித்தது போல் பூகம்பம், சுனாமி, என்று பூமியில் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை என்றாலும் அரசியல் களத்தில் அன்று பெரும் சுனாமி நிகழ்ந்தது...




"அண்ணாச்சி இளம் மாறன் அரசியலிலிருந்து வெளியேறுவதாக அறிக்கை விட்டு விட்டானாம்..."

த.ப.க கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இடியாய் விழுந்தது அந்த செய்தி...
"எப்படி சாத்தியம் இப்ப அவன் தானே அரசியல் 'டாக் ஆப் டவுன்' சான்சே இல்லை..." மூத்த தலைவரில் ஒருவரான செந்தாமரை.

மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

"அவன் நாடகம் ஆடறான் அண்ணாச்சி, விடை பெறுகிறேன்னு போன எவனும் அரசியல் விட்டு போனதா சரித்திரமே இல்லை ...இதெல்லாம் அரசியல் ஸ்டெண்ட்"

"ஆமா அண்ணாச்சி, நாங்க பலமுறை உங்களுக்கு சொன்னோம் அவனுக்கு முன்னுரிமை கொடுக்காதீங்கன்னு...உங்களைப் போலவே அரசியல் பண்ணுறான்னு தலையிலே வச்சிக்கிட்டு ஆடுனீங்க இப்ப, அவன் ஆடுற ஆட்டத்தைப் பார்த்தா அவன் அரசியலில் உங்களை மிஞ்சிடுவான் போலிருக்கிறது..."

மூத்த தலைவர்கள் ஆளாலுக்கு பேச இளம் தலைவர்கள் அமைதிகாத்தனர்.

அண்ணாச்சி முகம் என்றுமில்லா இறுக்கத்தில் இருந்தது.

அண்ணாச்சி என்ற அருணாச்சலம் அரசியலில் ஒரு பழுத்த பழம். த.ப.க கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே கட்சியின் முக்கிய தலைவராக இருக்கும் அண்ணாச்சி இன்றைய அரசியல்வாதிகளின் முன்னோடி...சமீப காலத்தில் கட்சியில் சேர்ந்த இளமாறன் அவர் ஜாதி (என்ன மொக்கை சாதியோ) என்பதால் அவருக்கு அவன் மீது அலாதிப்பிரியம்.கட்சி மாநாட்டில் திடீரென்று கட்சியின் "சக்திமான்" என்று மணிமகுடம் சூட்ட , மூத்த தலைவர்கள் ஆடிப்போனார்கள்...இப்படி மூத்த தலைவர்கள் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கும் இளமாறன் இன்று அதன் உச்சக்கட்டமாக இந்த அரசியல் விலகல் அறிவிப்பின் பின்ணனி என்ன?

அண்ணாச்சியின் முகத்தில் இறுக்கும் கலையவில்லை...கூட்டத்தில் சத்தம் அதிகமானது...

" அண்ணாச்சி இப்படியே அமைதியா இருந்தா எப்படி...அவன் உங்க வாரிசா இருந்தாலும் பரவாயில்லை..எவனோ ஒருத்தன் அவனை வளர விடக்கூடாது."

"ஆமா அண்ணாச்சி, இப்படியே போனா இத்தன வருசமா உங்ககூடவே அரசியல் பண்ணுற நாங்க எங்கே போறது..? அவன் எதுக்கும் துணிஞ்சவன் 'எலக்சன் கமிசன்' மேலேயே குற்றம் சொல்லுறான்...எலக்ட்ரானிக்ஸ் "வாக்கு மிசினில்" குளறுபடின்னு அறிக்கை விடறான்...இதையே காரண வச்சி அவனை அரசியலை விட்டே துரத்தணும்"

"நான் அவன் கிட்டே பேசறேன்லே"

கூட்டம் கப்சிப் ஆனது...

கூட்டம் கலைந்தது...அண்ணாச்சியின் முகத்தில் இருக்கம் மட்டும் குறையவில்லை.

தொலைபேசியை எடுத்தார்...மறுமுனையில் இளமாறன் ...

"நான் அண்ணாச்சிலே.."

"சொல்லுங்க தலைவா.."

"நாம சந்திக்கணும்"

"எங்கே வர"

"வழக்கமான இடம் தான்"

கடற்கரை...காற்று வழக்கத்தை விட அதிகம் வீச அண்ணாச்சி தலையை கோதியபடி காரை விட்டு இறங்கினார்...சில முக்கியமான இடங்களுக்கு ஓட்டுநரை அழைத்து செல்வதில்லை...இப்போதும் அப்படிதான்...அண்ணாச்சி தனியாகவே வந்திருந்தார்.

இளமாறன் ஏற்கன்வே காத்திருந்தான்.

"வந்து ரொம்ப நேரமாச்சா"

"இல்ல அண்ணாச்சி இப்பதான்"

"அப்புறம் என்ன விசேசம்லே"

"எல்லாம் நீங்க சொன்ன மாதிரிதான் அண்ணாச்சி..அரசியலை விட்டு விலகுறதா அறிக்கை விட்டேன்...தொலைபேசி தொல்லை பேசியாயிடுச்சி, தொண்டர்கள் வீடு முன்னே வந்து மீண்டும் வரச்சொல்றாங்க...நான் உங்க உத்தரவுக்கு காத்திருக்கேன்..." இளமாறன்.

சிறிது யோசித்த அண்ணாச்சி, தொடர்ந்தார்...

"இன்னிக்கே அரசியல் விலகல் சம்பந்தமா உன் வீட்டில் பிரஸ் மீட்டிங் அரேன்ஞ் பண்ணு...மீட்டிங்க நடந்துக்கிட்டு இருக்கிறப்ப, சில ரவுடிங்க உன் வீட்டு முன்னாலே வந்து உன் வீட்டை தாக்குவாங்க...அரசியலை விட்டு ஓடிப்போகும்படி மிரட்டு வாங்க..

அப்ப சில கட்சிக்காரங்க வந்து அவங்களை துரத்துவாங்க...நீ அரசியலை விட்டு விலகினா உன் வீட்டு முன்னாலேயே தீக்குளிப்பேன்னு, பெட்ரோலை மேலெ ஊத்திக்குவாங்க...நீ ஓடிவந்து அவங்களை தடுக்கனும்

" உங்களை மாதிரி தொண்டர்களுக்காக நான் மீண்டும் அரசியலுக்கு வருகிறேன்னு" அங்களை கட்டிபிடிச்சபடி ஒரு அறிக்கை விடு அப்புறம் பாருலே உன் அரசியல் எழுச்சியை..."

பிரமிப்பு அகலாமல் அவரையே உற்று நோக்கி வந்த இளமாறன், அண்ணாச்சி நீங்க தெய்வம் அண்ணாச்சி...என்று காலில் விழப்போனவனை நீதாண்டா என் அரசியல் வாரிசு என்று கட்டிக்கொண்டார். அவரிடம் இருந்து மெதுவாய் விடுவித்துக்கொண்ட படி இளமாறன், "அண்ணாச்சி எதுக்கு இந்த நாடகம்..?" பயந்தபடி கேட்டான்...

"என்ன மாறா...அண்ணாச்சி அரசியலில் பழுத்து கொட்டை போட்டவன், கட்டிவா என்றால் வெட்டிக் கொண்டுவரும் தொண்டர் படையை கொண்டவன்...என்னடா ஒரு சின்னப்பயலுக்கு இவ்வளவு பண்ணுறேன்னு பார்க்குறியாளே...இந்த கூட்டமெல்லாம் அண்ணாச்சி இதே கெத்தோட இருக்கிறவரை தான்லே, உண்மையா பார்த்தா இங்கே யாரும் விசுவாசி இல்லை. எப்படா அண்ணன் காலியாவான் திண்னையைப் பிடிக்கலான்னு இங்கே பயங்கர போட்டி...இந்த பசங்க கிட்டே கட்சியை நம்பி ஒப்படைக்க முடியாது.

அப்ப தான் உன்னை பார்த்தேன் நான் அரசியலுக்கு வந்த புதுசுலே இருந்த அதே வேகம், அதே பரபரப்பு, அதே ஞானம்..அப்பவே முடிவு பண்ணினேன் இனி இந்த கட்சிக்கு நீதான் தலைவன் என்று... இருந்தாலும் நானே உன் கிட்டே இந்த பொறுப்பை தந்தா மூத்த தலைவர்கள் ஏத்துக்க மாட்டாங்க, அது தான் தொண்டர்களே உன்னை தலைவனாக ஏற்றுக்கொள்ள செய்யவே இந்த ஏற்பாடு.

இளம் தலைமுறை அரசியலுக்கு வந்து நல்லது பண்ணனுமென்று மேடைக்கு மேடை பேசறோம்... ஆனா கிழங்களான நாங்களே நாற்காலியை விட்டு அசையலைன்னா உன்னைப் போல பொறுப்புள்ள இளைஞர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்...?

உண்மையில் அரசியலிருந்து விடை பெற வேண்டியது நீ இல்லைலே...நான் தாம்ளே..."

என்ற படி தன் தோள் துண்டை இளமாறன் தோளில் போர்த்தி விட்டு நெஞ்சம் நிமிர்ந்து நடந்தார் அண்ணாச்சி..

அடுத்த நாள் தலைப்பு செய்திகளில்...

"மீண்டும் இளமாறன்...அரசியலிருந்து விடைபெறுகிறார் அண்ணாச்சி"

பி.கு:-

  • கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் 101% கற்பனையே..
  • ப்ளாக் காப்பி தடைச்சட்டம் 2009 படி காப்பியடிக்க தடை செய்யப்பட்ட வலைப்பூ இது..

"பிரபலப்பதிவர்" கீழை ராஸா என்ன சூப்பர் ஸ்டாரா?

என்ன கர்வம், என்ன திமிர், என்ன அழிச்சாட்டியம் இப்படி நினைத்த படி தான் இந்த பக்கத்திற்கு வந்திருப்பீங்க... ஒரு பிரபலம் என்றால் ஆயிரம் கல்லடிகள் படத்தான் செய்யும்...




ஜனாதிபதி கையால் விருதை வாங்கிய சேதி கேட்டு வீடு தேடி வந்த மீடியாவை அலட்சியமாகப்பார்த்து, விருது எனக்கு ஒன்றும் புதிதில்லை நான் கல்லூரியில் படிக்கும் போதே என்னோட படைப்புக்காக சாகித்திய அகடமி விருது பெற்றவன் என்ற படி ஜனாதிபதி அவார்டை கையில் வைத்துக் கொண்டு கொடுக்க வேண்டிய பேட்டியை இப்பவே லீக் பண்ணுறோமோ என்ற வருத்தம் இதை எழுத முற்படும் போது மனதில் தோன்றி மறைகிறது.

இருந்தாலும் நண்பர் "நட்புடன் ஜமால்" சில வாரங்களுக்கு முன் அழைத்த தொடர்பதிவிற்காக இந்த பிரபலப்பதிவரின் பேட்டி உங்கள் பார்வைக்கு...



1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

முகம்மது ராஜாக்கான் - என் பெயர்
"ராஸா" அன்பானவர்கள் அழைக்கும் பெயர்....

கீழக்கரை - என் ஊர்

"கீழை மாநகரம்" ஊருக்குச் செல்லப்பெயர்...

இரண்டும் இணைந்தது தான் "கீழை ராஸா" ( எல்லோரும் பலமா கைதட்டுங்க...இது தான் ஹீரோ (ஜீரோன்னு படிச்சிடாதீங்கப்பூ) அறிமுக காட்சி...)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
"அழுகையை அழுது வடிப்பதை விட அடக்கி வைப்பதே கடினம்" என்ற கொள்கை உடையவன் நான்...

சில இதயக்கீரல்களின் போது...


"அடியே பெண்ணே நீ மட்டும் ஆறுதல் சொல்லவதாய் இருந்தால் அழுது கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறதே..." என்ற அந்த கிராமத்து ராஸாவின் வரிகளுக்கிணங்க, பிரியமானவளின் தோள் சாய்ந்து அழத்தோன்றும் இருந்தாலும் எனக்கு கடின வேலைகள் செய்யப்பிடிக்கும்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

என்னைப்போலவே என் எழுத்துக்களும் குண்டு குண்டாய் அழகாய் (அதிர்ச்சி ஆகிடாதீங்க எழுத்துக்கள் மட்டும்) இருப்பதாய் எல்லோரும் சொல்வார்கள்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

வாரம் முழுவதும் இயந்திரமாகவே மதிய உணவும் அமைவதால், விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை மதிய உணவே மனம் நிறைந்த மதிய உணவு.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நீயூட்டன் மூன்றாவது விதிக்கு நான் சரியான உதாரணம் எதிரே இருப்பவர் எப்படியோ அப்படியே என் எதிர் விசையும் இருக்கும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

நல்லவேளை குளிக்கப் பிடிக்குமா என்று கேட்கவில்லை...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்... அது தான் உண்மை பேசும்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது...மற்றவர்கள் நிலையிலிருந்து யோசிக்கும் தன்மை...
பிடிக்காதது...அவ்வப்போது என்னுள் ஏற்படும் சோம்பல்....எப்போதாவது வரும் கோபம்...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

தன்னை விட என்னை விரும்பும் " ராட்ஷச" அன்பு

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் தாய்...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வெளிர் வர்ணம்

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கணிணியை கண் இமைக்காமல்....காதில் ஏசியின் ஓசை...

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

14.பிடித்த மணம் ?

எல்லா "மண"ங்களையும் ஒருங்கே இணைத்து
எங்கள் இரு"மன"த்தை ஒன்றிணைத்த என் திருமணம்...

ரோஜாவின் மணம்...

மழைநேர மண்ணின் மணம்...

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
நான் ஒருவரை அழைக்கப்போவதில்லை... துபாய் பதிவர் மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து பிரபல பதிவர்களையும் அழைக்கிறேன்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
"நட்புடன் ஜமால்" அவர் பெயரே ஒரு பதிவுதான்..."நட்புடன்" என்ற பெயரை மட்டும் வைத்து கொண்டிராமல் அனைத்து புதுபதிவர் பதிவுகளிலும் சென்று அதை படித்து கமெண்ட் போட்டு பின்னூட்டங்கள் மூலமே அனைவர் மனங்களிலும் பதிந்தவர் அவர்...

17. பிடித்த விளையாட்டு?

அன்று - கிட்டி கம்பு(கிட்டி புல்)
இன்று - கிரிக்கெட்

18.கண்ணாடி அணிபவரா?

முன்னாடி இருப்பதை பார்ப்பதற்கு
கண்ணாடி அணியாவிட்டாலும்
பின்னாடி பிரச்சனைகள் வராமல் இருக்க
அவ்வப்போது கண்ணாடி அணிவதுண்டு...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

எதார்த்தப்படங்கள்...

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க...
21.பிடித்த பருவ காலம் எது?

வசந்தம் வீசிய, வீசும் எல்லாப்பருவமும்...

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

என் பழைய டைரிகளை...

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாற்றம் ஒன்றே மாறாதது...

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

தென்றலின் வயலின்.... அருகில் வந்து அடிக்கப்படும் ஹாரன் ஒலி..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

முதல் முதல் பள்ளி சென்ற போது அந்த ஆரம்பப்பள்ளி எனக்குத் தெரிந்த தூரத்திற்கு இன்று நான் பயணித்திருக்கும், அமீரகம், ஏமன், ஓமன், சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகள் கூட தெரிவதில்லை.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஒரு சூப்பர் ஸ்டாரைப்பார்த்து கேட்கும் கேள்வியா இது...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நான் எட்டாவது படித்த போது நிகழ்ந்த என் தாயின் மரணம்..

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அது தூங்கும் போது ஏனய்யா தட்டி எழுப்புறீங்க...

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கோவா...சிங்கை

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

நான் நானாக...எப்போதும்...

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

எனக்கு பொய் சொல்ல பிடிக்காது...( இதுவே ஒரு பெரிய பொய் தானேன்னு கமெண்ட் போட்டுடாதீங்க)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

முட்கள் நிறைந்த பூஞ்சோலை...

தொட‌ர்ப‌திவுக்கு நான் அழைப்ப‌து,
அமீரக தமிழ் பதிவர்களே, மாநாட்டுக்கு வந்த பிரபலங்களே, மற்றும் அமீரக தமிழ் பதிவர்கள் குழும உறுப்பினர்களே....
வாருங்கள் பிரபலங்களே வந்து குமுறுங்கள்...

துபாய் பதிவர் மாநாட்டில் "சக்தி" இழந்த அண்ணாச்சி அவருக்கு "ஆப்பான" அய்யனார்...

இன்று எதை கிழித்தாய்...என்று யாரும் கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே தினம் கிழிக்கும் காலாண்டர் முன் நின்றேன்... தேதி கிழித்த மறு நொடியே என்னுள் மின்னல்...ஆம் இன்று பதிவர்கள் மாநாடு...மனம் குதித்தது... அண்ணாச்சி வருவாக, குசும்பன் வருவாக, சென்ஷி வருவாக, சூட்டிங் பார்க்க கிளம்பும் உற்சாகம் பல "பிரபலங்களை" காண மனம் விழைந்தது...


ஆறு மணி மாநாட்டிற்கு மூணு மணியே எழுந்து குளித்து...( லீவு என்பதால் சற்று அசந்து தூங்கிவிட்டேன், தேதி கிழித்ததும் அப்ப தான்)

ஜிப்பா, குர்தா அணிந்து கண்ணாடி பார்த்தேன்,ஒரு ஜோள்னா பை மட்டும் மிஸ்ஸிங்...இது வேளைக்கு ஆகாதென்று சட்டை அணிந்து இன் பண்ணிப்பார்த்தேன் "டை" மட்டும் கட்டினால் ஆபீஸ் போய் விடலாம்...சே இதுவும் ப்ளாப்...கடைசியாக டீசர்ட் அணிந்து நான் பண்ணிய அலம்பல்களைப்பார்த்து கொண்டிருந்த ரூம் மேட்கள் கொலை வெறியோடு பார்த்த படி எங்கே ராஸா கிளம்பிட்டீக என்றார்கள்...



"பதிவர்கள் மாநாடு இருக்குதுலா அதுக்கு தான்" நான்

"அதுக்கு நீங்க எங்கே போறீங்க"

"என்ன இப்படி கேட்கிறே.. நானும் பதிவர்தாண்டா"

"கிழிஞ்சது போ"

"டேய் நம்புடா நானும் பதிவரா ஃபார்ம் ஆயிட்டேண்டா..."

என்று கதறியும் எவனும் நம்ப வில்லை.

ஒரு வழியா கேமராவை தூக்கிகிட்டு வெளியே வந்து "பார்த்துக்கோ, பார்த்துக்கோ நான் பதிவர் மாநாடு போறேன்...இந்த ஏரியாவுலே நானும் ஒரு பதிவர் தான்" என்று உதார்விட அந்த நேரத்தில் அந்த பக்கம் சென்ற பக்கத்து குரோசரி மம்மது குட்டி, என்ன பதிவரோ...ன் மன்சிலரியா ...என்க பொத்திக்கினு காரை ஸ்டார்ட் செய்து கராமா நோக்கி செலுத்தினேன்.



மாநாட்டு திடல் கூட்டம் அலை மோதியது. (லீவு நாட்களில் மக்கள் பார்க்கிற்கு வருவது சகஜம் தானே)

இதில் எப்படி பதிவர்களை கண்டு பிடிப்பது...? பதிவர்களுக்கு ஒரு குடும்ப பாடல் இருந்தாலாவது "அன்பு மலர்களே" என்று குரல் கொடுக்க "நாளை நமதே" என்ற படி பதிவர் கூட்டம் ஓடிவரும்... அதுவும் மிஸ்ஸிங்...
என்ன செய்வது... நீண்ட யோசனைக்கு பின் ஒரு யோசனை தோன்ற சத்தமாக

"தமிழ்மணம், தமிழிஸ், தமிழ்வெளி, திரட்டி, பதிவர்வட்டம், மீத ஃபர்ஸ்ட்" என்று தொடர்ந்து கத்த ...

ஒரு மூலையிலிருந்து "ரிப்பீட்டு" என்று ஒட்டு மொத்தக் குரல் கேட்க அங்கே பார்த்தால் "பதிவர் வட்டம்" ( பின்னணியில் பலத்த சத்தத்துடன் ட்ரம்ஸ் மியூசிக்)


வட்டம் சற்று பெரிதாகத்தான் இருந்தது...அண்ணாச்சி வழக்கத்திற்கு மாறாக வெகு கேசுவல் ட்ரஸ்ஸில் அமர்ந்திருக்க சகாக்கள் அனைவரும் நிராயுத பாணியாய் (ஆயுதங்கள் தடை செய்யப்பட்டதால்)

இதை விட லேட்டாய் வேறு யாரும் வர முடியாது என்று மாநாடு குழு முடிவெடுக்க அண்ணாச்சி கண்ணசைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார்..
விழா ஆரம்பித்த மறு நொடியே அண்ணாச்சி மீது அய்யனார் கொலைவெறியோடு பாயந்தார்.
மேலும் சமீப காலமாய் அண்ணாச்சி போக்கில் ஏற்பட்ட மாற்றம் பற்றி பேச அண்ணாச்சி "சக்தி" இழக்க, அவருக்கு "ஆப்பானார்" அய்யனார்.

முதலில் ஆஃப் ஆன அண்ணாச்சி சுதாரித்து கொண்டு "நான் டி.ராஜேந்தர் காலத்திலிருந்தே பதிவெழுதுபவன்...அதுக்காக இன்னும் அவரைப்போலவே இருக்க இயலாது சிம்பு ரேஞ்ஜுக்கு நான் மாறுவது தான் என் வெற்றி பயணத்திற்கு காரணம் என்ற அண்ணாச்சி, உணர்ச்சியின் உச்ச கட்டமாய் தன்னை ஒரு "மொக்கை பதிவர்" என்று ஆணித்தரமாய் கூறியும் எவரும் நம்பத் தாயாராய் இல்லை...( அது உண்மை என்று தெரிந்தும்)



அன்பர் ஆசாத் படித்ததில் பத்து சதவீதம் பதிவாகவும் 90% பின்னூட்டமாகவும் எழுதப்பட வேண்டும் என்றார்...பாதி பதிவர்கள் அந்த நேரத்தில் தண்ணீர் குடித்து கொண்டிருந்தார்கள்...
அய்யனார் ரொம்ப சீரியஸ்ஸாக பல கருத்துக்களை கூற குன்னக்குடியின் வயலின் இசை சோக ராகமாய் பின்ணணியில் இசைக்க அவையெங்கும் மயான அமைதி...
அதை கலைக்கும் விதமாக "நீங்க ஏண்டே ப்ளாக் ஆரம்பிச்சீங்க"என்ற பீதியை கிளப்பும் கேள்வியை ஆரம்பித்து வைக்க விழா கலைகட்டியது...

குசும்பன் வேலையில்லாததால் ப்ளாக் ஆரம்பிச்சேன் என்று பலவருசங்களா அவர் மனசுலே தேக்கி வச்சிருந்த உண்மையை போட்டு உடைக்க மீ..டூ ...என்று அதை சிலர் ஆமோதித்தனர்.
அதிமேதாவிகளுக்கு சிம்ம சொப்பனமாகவே நான் பதிவரானேன் என்று அண்ணாச்சி சொல்ல, புது பதிவர்கள் டரியல் ஆனார்கள்...

இப்படி செல்ல தீடீரென்று விழுந்தது ஒரு அணுகுண்டு ..."ஒரு சிறந்த பதிவு எப்படி இருக்க வேண்டும் அதன் அளவு கோல் என்ன?" என்ற கிளியனூர் இஷ்மத்தின் தடாலடி கேள்வியாய்..."தெரியலையப்பா" என்று நாயகன் கமல் ரீதியில் அண்ணாச்சி நழுவ... அய்யனார் ஆக்ரோசமாய் பதில் சொன்னார், அதற்கு இஷ்மத் "புரியலையப்பா" என்ற அதே கமல் பாணியில் கேட்ட கேள்வியை வாபஸ் பெற்று கொண்டார்.

இடையே மாநாடு சல சலக்க சுல்தான் பாயும், படகு பதிவரும் மாநாட்டில் ஐக்கியமாக மாநாடு தொடர்ந்தது...

புதிய பதிவரின் ஆதரவை குறிவைத்து, புதிய பதிவர்களையும் பேச அனுமதிக்குமாறு குசும்பன் எடுத்து வைக்க,புதியவர், பிரபலப்பதிவர் என்ற வார்த்தைகளை அண்ணாச்சி அவை குறிப்பிலிருந்து நீக்கச் சொல்ல அவை ஆமோதித்தது...

இப்படி விழா சென்று கொண்டிருக்க பட்டிமன்ற பேச்சாளர் அப்துல் வாஹித்(அனானி நம்-1) எல்லோருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக உங்களில் சிறந்த இரண்டு பதிவுகளை குறிப்பிட்டு பேசுங்களேன் என்க, அவையில் நீண்ட பெருமூச்சு...



லியோ அவர்கள், நீங்கள் ஒருவருக்கொருவர் சாடிக்கொள்வதை நிறுத்துங்கள் நான் பதிவெழுதுகிறேன் என்க...

வெகுண்டெழுந்த குசும்பன், சிங்கை பதிவர்கள் சிங்கம் போல் சாடிக்கொள்கிறார்களே அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நாங்க, நிறுத்துறோம்....

மலாய் பதிவர்கள் மல்லுக்கட்டிக்கொள்கிறார்களே அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நாங்க, நிறுத்துறோம்....

என்ற ரீதியில் ஆரம்பிக்க "ஆத்தாடி" என்ற படி அண்ணன் யெஸ் ஆனார்.

"எதை எதிர்பாத்து எழுதுகிறோம்"என்று சுல்தான் பாய் கேட்க...மற்றவர்கள் படிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் என்ற வாதம் முன்னிறுத்தப்பட்டது.

எல்லோரும் உலக ஒற்றுமையைப் போல வலையுலக ஒற்றுமையை பற்றி பேச இனி எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை வரி தீர்மானத்துடன் விழா இனிதே நிறைவுற்றது...

-ஒளிப்பதிவாளர் பாலை ராஸாவுடன்
கீழை ராஸா...கண் நியூஸ்

அமீரக தமிழ்ப்பதிவர் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கான தடாலடி விதிமுறைகள்...

"தமிழ் பதிவர் உலக தந்தை அண்ணாச்சி அழைக்கிறார்..."???என்ற விளம்பரம் கண்டு (கொடுத்த காசுக்கு இவ்வளவு தான் கூவ(புகழ) முடியும்.. அண்ணாச்சி)மாநாட்டு வருவோருக்கான சில விதிமுறைகள் வகுத்தால் எப்படி இருக்கும் என்று என்ற ரோசனையின் பலன் தான் இந்த "கைடு" பதிவு.

  • மாநாட்டிற்கு ஆயுதம் கொண்டுவருவது முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.முக்கியமாக பெல்ட் அணிந்து வருவதை தவிர்க்கவும்.மாலை,சால்வை பொன்ற "மிதவாத ஆயுதங்கள்" தகுந்த பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படும்.பழைய மாடல் செல்போன்கள் ஆயுதமாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் புதிய மாடல் செல்போன்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.


  • மாநாட்டில் உணவு வழங்கப்படும் என்று நம்பி கொலைப்பட்டினியுடன் வந்து மயக்கம் போட்டு மாநாட்டில் பேசுபவர்கள் மீது பழியைப்போடாமல் எப்போதும் போல சாப்பிட்டு விட்டே வரவும்.


  • ஒரு வலைப்பூவிற்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால் மாநாட்டுத்திடலுக்கு லாரிகளில் வருவதை தவிர்க்கவும்.


  • பதிவர்கள் தங்கள் ப்ளாக் சம்மந்தப்பட்ட பேனர்கள், மற்றும் கொடிகள் கொண்ட விளம்பர பலகைகளை மாநாட்டுத்திடலுக்கு வெளியே வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


  • மாநாட்டில் அவர் வாழ்க, இவர் ஒழிக கோஷங்கள் முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது.


  • பதிவர்கள் பேசிமுடித்ததும் மீதஃபர்ஸ்ட், அருமை,கலக்கிட்டீங்க, ரிப்பீட்டு,மீ..டு, அவ்வ்வ்வ்வ் போன்ற ஒற்றை வார்த்தை கமெண்ட்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.


  • மாஸ்க் அணிந்து வருபவர்கள் அனானிகளாக கணக்கில் எடுக்கப்படுவார்கள்.


  • தாயகம், மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களாக மாநாட்டிற்கு வரும் அமீரகம் சாரா பதிவர்கள்...தங்கள் சொந்த செலவில் வந்து, தங்கி உண்டு, ஊர் செல்ல வேண்டுமாய் அறிவுத்தப்படுவதுடன்...தாங்கள் ஊரிலிருந்து கிளம்பும் போதே அந்தெந்த பகுதிகளில் பேர் பெற்ற இனிப்பு வகைகளை வாங்கி வந்து மாநாட்டில் விநியோகித்து அமீரக பதிவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அமீரகம் சாரா பதிவர்களை கவுரவிக்கும் விதமாய் "இலவசமாக" ஒரு லிட்டர் மசாஃபி வாட்டர் பாட்டில் வழங்கப்படும் என்பதால் வெளிநாட்டுப்பதிவர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விதிமுறைத் தொகுப்பு:
அமீரக அனானிகள் முன்னேற்ற சங்கம்

என் பள்ளிப்பருவமும், பதிவர் உலகமும்…

“பாட்டி நானும் பதிவராயிட்டேன்”

நான் வலைப்பூ ஆரம்பித்தவுடன் ஏற்பட்ட சந்தோஷத்தை என் எழுத்து வேகத்திற்கு எண்ணெய் ஊற்றி எனர்ஜி தந்த சீதாப்பாட்டிக்கு அமெரிக்காவிற்கு அழைத்து பகிர்ந்து கொண்ட தருணத்தை எண்ணிப்பார்க்கிறேன்.

அப்போது எனக்குத்தெரியாது இந்த பதிவர் உலகம் இவ்வளவு சவால் நிறைந்ததென்று….

நான் எப்போது எழுத ஆரம்பித்தேன் என்பது என் நினைவில் இல்லை ஆனால் என் பள்ளி பருவத்தில் நான் எழுதாத எழுத்திற்கு கிடைத்த விமர்சனங்கள்…என்னுள் மறக்க முடியாத பாகத்துள் பதிவாகியிருக்கிறது.



அப்போது நான் நடுநிலைப்பள்ளி படித்துக்கொண்டு இருந்தேன் என்று நினைக்கிறேன்.அது ஒரு கோ-எஜுகேசன் பள்ளி…அந்த வயதில் ஆண்,பெண் என்று பிரித்து பார்க்கும் பக்குவம் இல்லாததனால் எனக்கு தோழர்களை விட தோழிகள் அதிகம்.அதிலும் “அவள்” எனக்கு நெருங்கிய தோழி…பள்ளிக்கூட பாதையில் என்னுடன் பயணப்படுபவள், நாள் முழுதும் என் கூடவே இருப்பாள்…அந்த வயதில் என்னென்ன கதை பேசினோம் என்று இன்று என் நினைவுகளிலிருந்து மீட்டெடுக்க இயல வில்லை…என்றாளும் இன்றும் அவளை எண்ணினால் என் நினைவுகளில் எட்டிபார்ப்பது…தெத்துப்பல் தெரிய அவள் சிரிப்பு…புத்தகத்திற்கிடையே அவள் வளர்த்த மயில் இறகு...அவ்வப்போது அவள் கடித்து தந்த கடலை மிட்டாய்…


இடைவேளை நேரங்களில் நாங்கள் சேர்ந்தே விளையாடுவோம்…வழக்கமான விளையாட்டுக்களை விட நாங்களே கண்டுபிடித்த (??) சில விளையாட்டுக்கள் அப்போது எங்களுக்குள் பிரபலம்… அதில் ஒன்று டாக்டர் விளையாட்டு.தீர்ந்து போன விக்ஸ் டப்பாவினால் செய்யப்பட்ட ஸ்டெதஸ்கோப் கொண்டு நோயாளியாய் நடிக்கும் நண்பர்களுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் நான்…

மிட்டாய் மாத்திரைகளை கடையில் வாங்கி புட்டியுனுள் இட்டு நான் எழுதித்தரும் மருந்துச்சீட்டுக்கு மருந்து கொடுக்கும் மருந்து கடை நடத்துபவளாக “ அவள்”.


எங்கள் விளையாட்டு எங்கள் சீனியர்களுக்குப் பிடிக்க வில்லை…அவர்களைச் சொல்லி குற்றமில்லை. மனிதன் வளர வளரத்தான் வக்கிரப்புத்தியும் சேர்ந்து வளர்கிறது.அவர்கள் வளர்ந்தவர்கள்… நான் எழுதிய மருந்துச்சீட்டை அந்தப்பெண்ணிற்கு நான் எழுதிய காதல்(???)கடிதம் என்றார்கள். டேய் இந்த வயசில் லவ் லட்டர் எழுதுறியா? என்றார்கள்…எனக்கு அர்த்தம் புரியவில்லை, அதற்கான வயதும் இல்லை…அதன் பின் அவளுடன் விளையாடக்கூடாது என்று கண்டிக்கப்பட்டதாய் ஞாபகம்…இருந்தாலும் நாங்கள் அந்த பள்ளி படித்த வரை “அவள்” தான் என் நெருங்கிய தோழி…

அதன் பின் வயதுக்கேற்ப ஒரளவு உலக அறிவு வளர… அடிக்கடி காதல் கவிதைகள் எழுதிய பழக்கம் இருக்கிறது.எனக்காக அல்ல என் நண்பர்களுக்காக…

நண்பர்களின் காதலிகளுக்காக நண்பர்கள் நிலையிலிருந்து நான் எழுதிய காதல் கவிதைகள் கிளிக் ஆக …நான் ராசிக்கார கவிஞன் ஆனேன்…உன்னைப்போல வருமா என்று நண்பர்கள் உசுப்பேற்ற …மருந்துக்கு கூட காதல் இல்லாமல் விரட்டி விரட்டி காதல் கடிதம் எழுதினாலும், கல்யாணத்திற்கு முன்பு வரை எனக்காக ஒரு காதல் கடிதம் கூட நான் எழுதியதில்லை… ( நம்புங்க…)

என் எழுத்துக்கள் அனைத்தும் மற்றவர்கள் பெயரிலேயே வெளி வர எழுத்துக்கள் அனைத்தும் முகம் அறியாமலேயே இல்லாமலேயே முகவரி தொலைத்தது.

சென்னையில் சிலவருடம் ஆணி புடுங்கிய காலங்கள்…

சீதாப்பாட்டி ( முத்தமிழ் சீதாம்மா) பழக்கமான தருணம் அது.
அந்த தமிழ் பாட்டியுடன் இலக்கியம் பேசிய தினங்கள்…வாழ்வில் மறக்க இயலா கணங்கள்…
சீதாப்பாட்டிக்கு நான் எழுதிய மடல்கள் தான் என் எழுத்திற்கான பயிற்சிப்பட்டறை…

அதன் பின் துபாய்…

காவிரிமைந்தனின் அறிமுகம்…என்னுள் சிதைந்திருந்த திறன்களை செப்பனிட்ட சிற்பி அவர். அதன் பின் அவரால் அறிமுகப்படுத்திய வானலை வளர்தமிழ், தமிழ்தேர் என்று என் எழுத்தை அங்கீகரிக்க ஒரு கூட்டம்.

அந்த நேரத்தில் தான் பதிவர் உலகம் பற்றி பாட்டி மூலம் அறிந்தேன்…அவரின் தூண்டுதலின் பெயரிலேயே தான் பதிவர் உலகில் புகுந்தேன். முதல் பதிவு எழுதிவிட்டு ஒரு பெருங்கூட்டம் வந்து படிக்கப்போகிறது என்று காத்திருந்த எனக்கு பெருத்த ஏமாற்றம்…என்னைத்தவிர வேறு யாரும் படித்த மாதிரி தெரியலை…ஒரு கமெண்ட் ஆவது வராதா என்று வந்து பார்த்தா வந்த ஒன்று, இரண்டு பேரும் பெயர் வெளியிட விரும்பாத வாசகர்கள்…

சரி நம்ம பதிவை நமது நட்பு வட்டத்திற்குள் மின் அஞ்சல் மூலம் பரப்புவோம் என்று, முதலில் எங்கள் Architect Group ற்கு அனுப்பி வைத்தேன். வெறும் Auto Cad, Site Work என்று வெறுமையாக கழிப்பவர்களுக்கு நம் எழுத்துக்கள் சற்று மாறுதலாக இருக்கட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் . இரண்டு நாள் கழிச்சி Comment Moderation page பார்த்தால் ஒரு Comment வந்திருந்தது… நம்மையும் ஒரு பொருட்டா நினைச்சி யாரோ ஒருத்தன் Comment போட்டிருக்காண்டா என்று ஆர்வத்துடன் Open பண்ணினா…என் ஜூனியர் ஒருத்தன் அனுப்பியிருந்தான் உள்ளே, Line, Circle, Copy, Erase ன்னு அனுப்பியிருந்தது.எனக்கு ஒன்றும் புரியவில்லை… உடனே அவனிடம் போன் பண்ணி கேட்டால் நீங்க தானே Post a Comment ன்னு போட்டிருந்தீங்க… அதனாலே தான் Auto Cad Comment எழுதி அனுப்பினேன்..நீங்க ஒன்று தான் கேட்டீங்க ஆனா நான் நாலு அனுப்பியிருக்கேன் என்று அவன் ஆர்வத்தில் பேசிக்கொண்டே போக, நான் டரியல் ஆகிப்போனேன்.

சரி இது தான் தோல்வியடைந்து விட்டது…மீண்டும் பதிவர்களுக்கே …மின் அஞ்சலில் அனுப்பினால் என்ன..? என்று எண்ணிய வேலையிலேயே சில மூத்த பதிவர்கள் கனவில் வந்து மிரட்டினார்கள்…ஆகா இவங்க கோபப்பட்டு “மின் அஞ்சலில் தொல்லை தரும் இளம் பதிவர்கள்” என்று மானத்தை வாங்கிப்புட்டா…? வேணாய்யா வேணாம்…தமிழ் மணம், தமிழிஷ் போன்றதிலேயே போதும் என்று ஒரு மனதாக முயல…அதிலும் சூடான இடுக்கையில் இடம் பெற நம் பதிவிற்கு தகுதியில்லையா என்று நம் உள்மனமே நம்மை வம்பிற்கிழுக்க…ரொம்ப மெனக்கெட்டு உக்காந்து யோசிச்சி ஒரு பதிவு போட்டா… அதுவும் இழுத்து ஊத்திக்கும்…

எந்த அடிப்படையில் பதிவுகள் இங்கு அங்கீகரிக்க படுகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் எல்லாம் நட்பு வட்டத்தின் அடிப்படையில் தான்…பின்னூட்டங்கள்…ஹிட் எல்லாமே பதிவின் தரத்தைப்பொருத்து மட்டுமே வருகிறதா என்றால்…கண்டிப்பாக இல்லை…இங்கு படிப்பவர்களை விட படைப்பாளிகள் அதிகம்…இதில் யாரையும் குறை சொல்ல இயலாது. இருந்தாலும் இதில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது. கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே…ஆம் எதிர்பார்ப்பை குறைத்து எழுதுவதை தொடர்வது மட்டுமே பதிவுலகில் வேரூன்ற ஒரே வழி…

“பாட்டி நானும் பதிவராயிட்டேன்…”

அப்போது எனக்குத்தெரியாது இந்த பதிவர் உலகம் இவ்வளவு சவால் நிறைந்ததென்று…

உண்மைத்தமிழன், நட்புடன் ஜமால்,எம்.எம்.அப்துல்லா தேர்தல் சீட்டு விவகாரம்…பிரபலப்பதிவர் அபிஅப்பா ஆதங்கம்…நிஜமாவே நல்லவன் கோவிக்கண்ணன் தொடர்பு அம்பலம்…

நான் சமீபத்தில் எழுதிய வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசியலில் பதிவர்கள்…உண்மைத்தமிழன், நட்புடன் ஜமால்,எம்.எம்.அப்துல்லாவிற்கு சீட்டு உறுதி…அண்ணாச்சி தலைமையில் ரகசியக்கூட்டம்... என்ற பதிவிற்கு அண்ணன் அபி அப்பா எழுதிய //அட மகா பாவிமனுஷா! எல்லார் டவுசரையும் ஒரு பதிவிலேயெ கிழிச்சா என்ன அர்த்தம். ஆனா சொல்லீட்டென் எனக்கு மாயவரம் சீட்டுக்கொடுக்கலைன்னாஇன் பிளாக் முன்னாடி டீ குடிப்பேன்:-))) // என்ற ஒரு பின்னூட்டத்தின் தாக்கமே இந்த பதிவிற்கு காரணம்.

நான் பதிவர் உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்து ஒரு வருடத்திற்கு மேலானாலும் சில தவிர்க்க இயலாத காரணங்களால் கடந்த வருடம் முழுதும் எழுத இயலா நிலை...இப்போதும் திரும்ப ஆரம்பித்தவுடன் துபாய் பற்றிய இரண்டு சீரீயஸ் பதிவுகள்...ரொம்ப சீரியஸா போனா “ஆக்ஸன் பதிவராகி” விடுவோம் என்பதால் இடையே இப்படி ஒர் நகைச்சுவை பதிவுவாக மேற்கண்ட பதிவை எழுதினாலும்… நான் வலைப்பூ ஆரம்பித்த காலத்தில் அரட்டை அரங்கத்தையும் அன்றைய முக்கிய பதிவர்களையும் கோர்த்து அன்று நான் எழுதிய (டவுசர் கிழித்த) ஒரு பதிவு அன்றே நல்ல பாராட்டை வாங்கித்தந்தது…

இந்த விசயம் தெரியாமல் அபிஅப்பா என்னிடம் டவுசர் கிழித்த சம்பவத்தை கேட்க எனக்கு மருதமலை படத்தில் வடிவேலுவிடம் “நான் உங்களை அடிசிருக்கேன் ஏட்டையா” என்ற ஜோக் ஞாபகம் வர இனி அபி அப்பாவிற்கும் எனக்கும் நடந்த உரையாடலை நீங்களே கேளுங்க…

நன்றி:அபி அப்பா

பதிவை படித்து விட்டு அபி அப்பா..

அபி அப்பா: அட மகா பாவிமனுஷா! எல்லார் டவுசரையும் ஒரு பதிவிலேயெ கிழிச்சா என்ன அர்த்தம்.யாரு ராஸா நீ

நான் : என்ன அபி அப்பா என்னத்தெரியலையா… நான் உங்களை காமெடி பண்ணி பதிவு போட்டிருக்கேனே…

அபி அப்பா: (ஆச்சரியத்துடன்) காமெடிப் பதிவு போட்டிருக்கியா ….எப்பமா…?

நான் : நல்லாத்திங்க் பண்ணிப்பாருங்க ஞாபகத்திற்கு வரும்…

அபி அப்பா: அந்த மூணு பதிவர்கள் சேர்ந்துக்கிட்டு “Me the first” Me the second” “Me the third “ன்னு கலாய்ப்பாங்களே அந்த குருப்பா…

நான் : இல்லேங்க…

அபி அப்பா: ஆ அந்த அஞ்சி பதிவர்கள் சேர்ந்துக்கிட்டு ஒரு நாள் புல்லா பின்னூட்டம் போட்டே கொன்னாங்களே அந்த குருப்பா

நான் : இல்லேங்க…

அபி அப்பா: அதுவும் இல்லையா…ஹூம் ஒண்ணு ரெண்டு பேரு நம்மலைப்பத்தி பதிவு போட்டா ஞாபகம் இருக்கும்….நம்மைச் சுத்தி தான் பதிவர் வட்டமே கும்மி அடிக்குதே…(ஞாபகம் வந்தவராய்) டேய் அன்னிக்கி அண்ணாச்சி, தமிழச்சி, குசும்பனோட என்னையும் கும்மி எடுத்தியே அவனா நீ…

நான் : ஆமா அபிஅப்பா…கரிக்கிட்டா கண்டுபுடிச்சிட்டீங்களே…

அபி அப்பா: அதை எப்படிப்பா மறக்க முடியும் ஆன ஒண்ணுப்பா அன்னிக்கி நீ அடிச்சா காமெடிக்கு அப்பறம் எவன் எழுதினாலும் தாங்கக்கூடிய ஒரு சக்தி வந்துடுச்சியா இந்த உடம்புலே…

நான் : அதை எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு பதிவர் வட்டத்திலே இருக்கிறதே ஒரு பெரிய சாதனை தான் அபி அப்பா…

அபி அப்பா: அதனாலே தானடா பதிவர் வட்டமே "என்னை ரொம்ப நல்லவன்னு" சொல்றீங்க… ஆமா நீ எப்படி ராஸா இருக்கே…?

நான் : எங்கே அபி அப்பா நான் அப்படியே தான் இருக்கேன்.. ஆனா அன்னிக்கு உங்களைப்பத்தி காமெடி பதிவு போட்ட கோவிகண்ணன், நிஜமாவே நல்லவன், எல்லாம் பெரிய பதிவர் ஆயிட்டாங்க…

அபி அப்பா: நான் சென்ஸ்…எப்படிடா பெரிய பதிவர் ஆனாங்க எப்படி ஆனாங்க…எல்லாரும் என்னைப்பத்தி எழுதுனதுக்கு அப்புறம் தான் ஆனாங்க… அந்த கோவிக்கண்ணன் கதையை சொல்றேன் கேளு…அவர் ஒரு நாளைக்கு பத்து பதிவு எழுதுவார் ஆனா அப்ப எல்லாம் பெரிய பதிவர் ஆகலே…ஒரு நாளு நம்ம பதிவு பக்கம் வந்தாரு ஒரு பின்னூட்டம் தாப்ப எழுத சொன்னேன்…என்ன மூடிலே இருந்தாரோ என்னை கிழிகிழின்னு கிழிச்சி ஒரு பதிவு போட்டுடாரு…நான் அப்படியே சாக் ஆயிட்டேன்…அன்னையிலே இருந்து தான் கோவியாரு கோவியாருன்னு? ஒரே நாளுலே பேமஸ் ஆயிட்டாரு, அந்த நிஜமாவே நல்லவன் ஒரு நாளைக்கு இருபது பின்னூட்டம் போடுவாரு எனக்கும் ஒரு பின்னூட்டம் போட்டா என்னனு தாய்யா கேட்டேன்…”அபி அப்பாவாலே பதிவர் வட்டத்திலிருந்து பிரிகிறேன்” பொலிச்சுன்னு ஒரு பதிவை போட்டுட்டாரு…அப்புறம் எல்லோரும் சேர்ந்து அவரை பெரிதாக்கி இன்னிக்கி அவரு நிஜமாவே நல்லவரு ஆயிட்டாரு…
ஆனா ரெண்டு பேரும் மரியாதை தெரிஞ்சவங்கடா… அந்த கோவிக்கண்ணன் நான் என்ன மொக்கை பதிவெழுதினாலும் ஒரு பின்னூட்டம் விடாமா போக மாட்டாரு…அந்த நிஜமாவே நல்லவன் ஒரு படி மேலே ஒரு பதிவுக்கு பத்து பின்னூட்டம் விடாமே போக மாட்டாரு…இது தெரியாமா என்கிட்டேயே வந்து பெரிய பதிவராயிட்டாரு, பெரிய பதிவராயிட்டாருன்னு பீச்சிக்கிட்டு இருக்கே…சரி அத விடு உன் பதிவெல்லாம் எப்படி போய்கிட்டிருக்கு…

நான்: (நொந்த படி)என்ன அபி அப்பா என்ன தான் மூச்சி திணற திணற எழுதினாலும் ஒரு நாளைக்கு நாளு பேரு வந்து எட்டி பார்க்கிறாங்க…மாசத்திற்கு ஒரு பின்னோட்டம்…கம்ப்யூட்டர் தெரிஞ்சாவது நட்புடன் ஜமால் மாதிரி எதாவது கிளாஸ் எடுக்கலாம்…நாமா படிச்ச படிப்புக்கு டீ கடையிலே கிலாஸ் எடுக்கத்தான் லாயக்கு…அதனாலே நான் ஒரு முடிவு பண்ணிட்டேன்…நானும் ஒரு நாளைக்கு நுறு ,முன்னூறு ஹிட் வாங்கி…பெரிய பதிவராகனுன்னு

அபி அப்பா: ஆகனும்டா ஆகனும்

நான்: அதுனாலே நானு உங்களைப் பத்தி எழுதி பெரிய ஆளா வரணும்னு முடிவு பண்ணிட்டேன்.ஏன்னா நீங்க ரொம்ப ராசிக்காரார் ஆயிட்டே…

அபி அப்பா : இன்னுமாடா இந்த உலகம் என்னை நம்புது… ஹய்யோ ஹய்யோ…

( இது போன்ற பதிவுகள் வெளியாக அபி அப்பா போன்றோரின் தாராள மனப்பான்மைக்கு முதல் நன்றியினைக்கூறி தொடர்ந்து ஆதரித்து வருவோர் அளிக்கும் ஆதரவே இன்னும் சிறப்பாக எழுத ஊக்குவிக்கும் என்பதால் உங்கள் தொடர் ஆதரவை பின்னூட்டங்கள் மூலமும், வாக்களிப்பின் மூலமும் தாராளமாக தரும்படி கோரிக்கை வைத்து… விரைவில் மீண்டும் கலக்கலுடன்…கீழைராஸா)


அண்ணாச்சி, தமிழச்சி, அபி அப்பா, குசும்பனை கும்மிய முந்தய பதிவு….

அரசியலில் பதிவர்கள்…உண்மைத்தமிழன், நட்புடன் ஜமால்,எம்.எம்.அப்துல்லாவிற்கு சீட்டு உறுதி…அண்ணாச்சி தலைமையில் ரகசியக்கூட்டம்...

என் இனிய வலைப்பூவாசிகளே…

இது தேர்தல் நேரம் அரசியல் களம் சூடு பிடித்து விட்டது, மூன்றாவது அணி,நாலாவது அணி என்று தொகுதிகளைவிட கூட்டணிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டு போகிறது. எல்லாத்துறையினரும் அரசியலில் போட்டிபோட்டு அரசியலில் குதிக்கும் போது பதிவர்களாகிய நாமும் அதில் குதித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் பலன் தான் இந்த பதிவு…நம் பதிவர்களுக்கு ஆதரவு கிடைக்கிறதோ இல்லையோ இந்த பதிவுக்கு நிச்சயம் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் நண்பன் கீழைராஸா….



தமிழ்மண அலுவலகம் அன்று திருவிழா போல் காணப்பட்டது… எல்லாப் பதிவர்களும் ஒன்று கூடினால் சொல்லவா வேண்டும் …அது பதிவர்கள் அரசியலில் குதிப்பதற்கான ரகசியக்கூட்டம் (!!!) என்றாலும் ரகசியமாக எல்லோரும் தன் பங்கிற்கு பதிவு போட்டு விட்டு வந்ததால் அது ஒரு பொதுக்கூட்டம் போல் காட்சியளித்தது…எல்லா நாட்டிலிருந்தும் பதிவர்கள் வந்து குழுமியதால் கட்டுப்படுத்துவது சற்று கடினமாகவே இருந்தது…கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்க அண்ணாச்சி தலைமையேற்க அவர் சகாக்கள் சீட்டை தக்க வைத்துக் கொண்டனர்.




அண்ணாச்சி: என்னங்கடே அண்ணாச்சி எல்லோரும் வந்தாச்சாடே…

நட்புடன் ஜமால்: அண்ணாச்சி Me the first

அண்ணாச்சி: ஆரம்பிச்சியாடே உன் வேலையை….

அனானி: அண்ணாச்சி Me the first

ஏழெட்டு பேர் சேர்ந்து : Me the first

குசும்பன்: ஆகா கிளப்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க…பதிவுலே தான் இப்படின்ன இங்கேயுமா…

அண்ணாச்சி: நிறுத்துங்கடே யாராவது “Me the first” இருந்துட்டு போங்கடே என்னை பேச விடுங்கடே

( கூட்டத்தில் சலசலப்பு ஓய்கிறது )

அண்ணாச்சி வடிவேலு பாணியில் கண்ணை மூடிக்கொண்டு…தனக்கு தானே” அப்பா எங்கே மதிக்காமே போயிடுவாங்களோன்னு பயந்துட்டேன்…என்ன இருந்தாலும் பதிவர் உலகத்துலே உனக்குன்னு ஒரு மரியாதை இருக்குடே…”காலரை தூக்கி விட்டபடி பெருமூச்சி விடுகிறார்…

அபி அப்பா: அண்ணாச்சி “ அது “ தானே நினைச்சீங்க….

குசும்பன் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அண்ணாச்சி: மனதுக்குள் ( பாவி மக்கா மேலேயும் கீழேயும் பாக்குதுங்க எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ…ஹூம்ம்

டிபிசிடி: அடவுலே இருக்க விட மாட்டாய்ங்க போலிருக்கே !!

அண்ணாச்சி: சரி சரி விசயத்திற்கு வாங்கடே…நாம கூடியிருக்கிறது எதுக்குன்னா…அரசியல் என்கிற சாக்கடையை சுத்தம் பண்ணும் விதமாக நாம அரசியலே குதிக்க போறோம்னு உங்க எல்லோருக்கும் தெரியும்.அது விசயமா ஒவ்வருவராக வந்து உங்களை நீங்களே அறிமுகப்படுத்தி, நீங்க அரசியலுக்கு எப்படி சரிப்பட்டு வருவீங்கன்னு சுருக்கமா பேசுங்கடே…

நட்புடன் ஜமால்: Me the first

அபி அப்பா: வேணாம்…வேணாம்…அழுதுடுவேன்…

சென்ஸி: இந்தப் பிரச்சனையே வேணாம்னு தான் பதிவர்கள் பெயரை சீட்டுலே எழுதி வச்சிருக்கோம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்போம்….

(குலுக்கல் முறையில் முதலில் உண்மைத்தமிழன் பெயர் வருகிறது )



உண்மைத்தமிழன்: என் இனிய வலைத்தமிழ் மக்களே…

கோவிக்கண்ணன்: வந்துட்டார்யா வலைத்தமிழ் பாரதி ராஜா…

உண்மைத்தமிழன்: என் இனிய வலைத்தமிழ் மக்களே…” பிறந்து வளர்ந்ததிலிருந்து சொல்லிக் கொள்ளும் படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை” என்று என் வலைப்பூ முகப்பில் எழுதி வைத்திருப்பதால், இவன் எந்த சாதனையும் புரியாதவன் என்று தப்புக்கணக்கு போட்டு விடக்க்கூடாது…” உண்மைத்தமிழன்” என்ற ஒன்று போதாதா ? நான் அரசியலுக்கு சரியான ஆள் என்பதற்கு…அரசியல் பற்றி நான் எழுதிய கொலைவெறி பதிவுகளைக் கண்டு தமிழ் நாடே டரியல் ஆகிக்கிடப்பது உங்களுக்கு தெரியாதா…?

அனானி: நீங்க எழுதினாலே நாங்க டரியல் ஆவது சகஜம் தானே…

உண்மைத்தமிழன்: பதிவர் வட்டத்தை , பதிவர் சதுரமாக்கியது என் சாதனை இல்லையா…

குசும்பன்: நாங்களெல்லாம் பதிவர் முக்கோணம், பதிவர் ஐங்கோணம், பதிவர் எங்கோணம்னு போயிக்கிட்டு இருக்கோம்…இவரு என்ன கப்பித்தனமா பேசிக்கிட்டு இருக்காரு…

உண்மைத்தமிழன்: அரசியல் பற்றி எனக்குத்தெரியாத விசயமா…1969…ல்

டிபிசிடி: அம்மாடியோவ் ஆரம்பிச்சிட்டாருய்யா…அண்ணாச்சி ஒரு சீட் கன்பார்ம்னு இவரை உட்கார வையுங்க இல்லை இந்த மீட்டிங் முடியுற வரை இந்த புள்ளி விபரம் மட்டும் தான் தொடரும்….

அண்ணாச்சி: சரி சரி உமக்கு சீட் கன்பார்ம் அண்ணாச்சி…

உண்மைத்தமிழன்: அண்ணாச்சி இப்படித்தான் 1972 ல்...( என்று ஆரம்பிக்க ஏழெட்டு பதிவர்கள் கைத்தாங்களாக அவரைத் தூக்கி வந்து சீட்டில் அமரச்செய்கின்றனர்…

அடுத்த குலுக்கலில் எம்.எம்.அப்துல்லா

அவர் பேச ஆரம்பிக்கும் முன்பே பின்னூட்டத்துடன் சிலர்…

நசரேயன் : அப்துல்லா என்ன பேசப்போறார்ன்னு தெரியலை ஆன Me the first…மீதி அவர் பேசி முடிந்ததும்…

குசும்பன்: எத்தனை அண்ணாச்சி வந்தாலும் உங்களை திருத்த முடியாதப்பா….

எம்.எம். அப்துல்லா: ஒண்ணுமில்லைச் சும்மன்னு தான் கூட்டிக்கிட்டு வந்தாங்க இங்கே வந்தா அரசியல்ன்னு சொல்றாங்க…என்னை பேச விட்டதே பெருசு.. இதிலே என்னைப்பத்தி நானே பேசனுமா… என்ன கொடுமைசார் இது…இருந்தாலும் இரயிலோடு விளையாடின்னு என் பால்ய அனுபவங்களை படியுங்கள்…

( அது பாலியல் அனுபவங்கள்னு காதில் விழ பதிவர்கள் தாங்கள் கொண்டு வந்த மடிக்கணிப்பொறியை தட்டி அந்தப் பதிவை தேட ஆரம்பிக்கின்றனர்…ஒரே நிமிடத்தில் ஆயிரக்கணக்கான ஹிட்)

எம்.எம். அப்துல்லா: நான் தெருவிளக்கில் படித்து , கவர்னருக்கே கை கொடுத்தவன்… என்று ஆரம்பிக்க…

மறு பேச்சே இல்லாமல் சீட் கன்பார்ம்…

அண்ணாச்சி: குசும்பு அது என்னங்கடே எல்லோரும் பேச பேச யாரோ ஒருத்தர் வந்து ஸ்மைல் பண்ணிட்டு மட்டும் போய்கிட்டு இருக்காரே யார் அது…

குசும்பு: அது வேற யாரு நம்ம மங்களூரு சிவா தான்…

அண்ணாச்சி: இங்கேயுமாங்கடே…

அடுத்த குலுக்கலில் நட்புடன் ஜமால்

நட்புடன் ஜமால்: என்னைப்பத்தி நானே சொல்லக்கூடாது… இருந்தாலும் சொல்றேன்… ஒரு மறு மொழி கிடைக்காதானு எல்லோரும் ஏங்கிகிட்டு இருக்கப்போ எனக்கு ஒவ்வொருத்தங்களும் அஞ்சி ஆறு மறுமொழி விடுவாங்க…நான் ஒரு ஓட்டு வாங்குனா ஐஞ்சி ஓட்டு வாங்கின மாதிரி…

டிபிசிடி: அதுக்க்கெல்லாம் மச்சம் வேணுமய்யா…

நட்புடன் ஜமால்: அப்புறம் எந்த பிரச்சனையும் இல்லாமே நெட்டுலே ஓட்டளிக்கிற ஒரு கூகில் சாப்ட்வேர் பத்தி உங்களுக்கு விளக்கலாம்னு இருக்கேன்…

அண்ணாச்சி: ஜமால் இங்கேயும் கற்போம் வாருங்களாடே… உமக்கு சீட் கன்பார்ம்டே…

ஹேமா: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ...தமிழ் மணத்திலே தான் சூடான இடுக்கையில் எனக்கு இடம் தரலை இங்கேயாவது சீட்டு தரலாம்ல…

அண்ணாச்சி : இது என்னங்கடே…

குசும்பன்: அண்ணாச்சி அரசியல்னு வந்தாச்சி…இப்ப லேடீஸ் செண்டிமெண்ட் ரொம்ப முக்கியம்…புதுகை தென்றல், பாசமலர், அன்புடன் அருணா, ஹேமான்னு நாளஞ்சி பொண்ணுங்களுக்கு சீட்டை கன்பார்ம் பண்ணுங்க… அப்ப தான் நம்ம சீட் தப்பும்…

அபிஅப்பா: அப்ப, அபி யோட அப்பாங்கறதினாலே எனக்கும் சீட் கன்பார்ம் இல்லையா அண்ணாச்சி…

குசும்பன்: அண்ணாச்சி இவரு டேஞ்சரஸ் ஃபெல்லோ இவரை கேர்புல்லாத்தான் ஹேண்டில் பண்ணனும்….

அனானி: அண்ணாச்சி தீர்ப்பை மாத்தி சொல்லு…

அண்ணாச்சி : நான் எங்கடே தீர்ப்பு சொன்னேன் …பதிவுலே தான் படிக்காமே பின்னூட்டம் போடுவே இங்கேயுமாடே…

தம்பி: அண்ணாச்சி நிலைமை மோசமா போயிடும் போல கூட்டத்தை ஒரு மணி நேரம் தள்ளி வையுங்க…

அண்ணாச்சி : அண்ணாச்சி எல்லோரும் களைப்பா இருப்பீங்க …போய் ஒரு பதிவு போட்டுட்டு வாங்க…மேலே பேசலாம்….

கீழைராஸா : என்னங்க… முதல் பகுதியை இப்படியே முடிச்சிக்கறேன்…அரசியலுக்கு உங்களை இழுத்துட்டேன் என்று ஆள்வைத்து அடிப்பது, ஆட்டோ வைத்து தூக்குவது இப்படி கொலை வெறியோடு செயல்படாமே காமெடியா மட்டும் எடுத்துக்கொண்டு உங்களின் பின்னூட்டங்களை தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்…என் பேரு இல்லையே என்று யாரும் வருத்தப்பட வேண்டாம்…கண்டிப்பா நீங்க எல்லோரும் இடம்பெறுவீங்க ஆன உங்களின் ஆதரவின் அளவைப்பொருத்து அடுத்த ஆணியை புடுங்க முயற்சி செய்யப்படும்.

குசும்பனுக்கு TBCD யின் திருமணப்பரிசு…காவல் துறையின் கிடுக்கிப் பிடியில் TBCD …கொண்டாடும் குசும்பன்…அரிய படங்களுடன்

சமீபத்தில் மலேசியா வருங்கால தொழிலதிபரும், மொக்கைப்பதிவருமான TBCD, குசும்பனுக்கு கொடுத்த 1000000000$ திருமணப்பரிசால் உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டதை நீங்கள் அறிவீர்கள்...


அதன் பின் நடந்த சோதனையில், அவர் மொக்கைப் பதிவெழுத துண்டுக்காகித மாகவே இது போன்ற டாலர்களைத்தான் உபயோகப்படுத்துகிறார் என்ற பல அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது...

விசாரித்த வருமானத்துறையிடம் "என்ன பத்தி நானே சொன்னா நல்லா இருக்குமா, அதுனால வேண்டாம்" என்று தன் வழக்கமான பாணியில் கூற, அதிகாரிகள் அவர் மேல் கொலைவெறியில் உள்ளார்கள் என்பது வேறு விசயம்...
விசயம் அறிந்த குசும்பன் அதைக்கொண்டாட சொந்த பணத்தில் (!!!)(திருமணத்திற்கு சேர்த்து வைத்தது) "டெசர்ட் சபாரி" சென்று கொண்டாடி வருகிறார்...( இதைப்பார்த்து திருமணத்தில் எதுவும் கோளாறு ஏற்பட்டால் டிபிசிடி தான் பொருப்பு )




இந்த வரலாற்று சிறப்பு மிக்க (!!!) பதிவை எழுத உதவிய அறிய பதிவுகள்:-

குசும்பனின் திருமணமும் & குசும்பன் என்னிடம் கேட்ட மொய்யும்

பெல்லி டான்ஸர் கூட ஒரு டான்ஸ்!!!

இந்த படைப்பை (???) குசும்பனுக்கு திருமணப்பரிசாக வழங்குகிறோம்...( டிபிசிடி க்கு ஆப்பு வைப்பதைத்தவிர குசும்பனுக்கு பெரிய பரிசு என்ன வாக இருக்க முடியும்..?)

TBCD க்கு ஆப்பு வைக்க விரும்புபவர்கள் வரிசையில் வந்து பின்னூட்டம் இடவும்...

அன்புடன்

TBCD யால் பாதிக்கப்பட்டோர் முன்னேற்ற சங்கம்

முட்டுச்சந்து

Related Posts with Thumbnails