வெளிநாட்டில் எதைத்தேடுகிறோம்…

வெளிநாட்டில் பொருள் தேடி வந்ததினால் நாம் இழந்தது எத்தனையோ... தேடிவந்த பொருள் கிடைத்தது ஆனால் தொலைத்து வந்த சந்தோசங்கள்..?


துபாய் தமிழ்த்தேர் இதழுக்காக கொடுக்கப்பட்ட "எதைத்தேடுகிறோம்" என்ற தலைப்பிற்கு நான் எழுதிய தேடல்கள்...

  • பந்தங்கள் சூழ
    வழியனுப்பப்பட்டு
    பறந்து வரும் முன்
    சொந்தங்கள் முன்
    தொலைத்த –அந்த
    சந்தோஷத்தை…..


  • கட்டிளம் காளையாக
    பாலைபுகுந்து இன்று
    கசக்கிப்பிழியப்பட்ட
    அடிமாடுகளாய்
    இழந்து நிற்கும்
    இளமையை…

  • KFC,சவர்மாவின்
    ருசியில் சிக்கி
    சவமாகிப்போன நாக்கில்
    அன்று ருசித்த
    அம்மாவின் சமையல்
    ருசியை…



  • வழியனுப்ப வாசல்
    வந்தவளின்
    விழி உகுத்த
    சிறு துளியில் -மனம்
    வலிக்க மறுநொடியே
    மறந்து வந்த
    இதயத்தை…


  • விடுமுறையில்
    வீடு செல்ல
    வழிப்போக்கன் போல்
    பார்த்த பிள்ளை
    புறப்படும் முன்
    புன்முறுக “அப்பா” என்க
    புல்லரித்து
    அள்ளி அனைத்து
    கொஞ்சிய
    அந்த நொடி
    பிஞ்சு ஸ்பரிசத்தை….

  • திருவிழாக்கள்,
    பெருநாட்கள் –
    உற்றார் புடைசூழக்
    கொண்டாட
    உளவியலாய் களையிழந்து
    மனமிங்கு தனிமையில்
    திண்டாட
    அலை, அலையாய்
    தொலைத்து நிற்கும்-அந்த
    இனிய தருணங்களை….

    பொருள் தேட என்றெண்ணி
    புறப்பட்டு வந்தோம்-இங்கு
    இருள் சூழ அருளிழந்து-மனம்
    புளுகி நின்றோம்
    தேடிவந்த பொருள் கிடைத்தும்-நாட்டில்
    தொலைத்து வந்த
    சந்தோசத்தை
    விட்ட இடம் விட்டு
    மற்ற இடத்தில்
    தேடுகிறோம் தேடுகிறோம்…

துபாயில் ஏ.ஆர் ரஹ்மான், மற்றும் “சுப்ரமணியபுரம்” திரைப்படக் குழுவினருக்குப் பாராட்டு, தமிழ்த்தேர் ஆண்டுவிழா காட்சிகள்.

வானலை வளர்தமிழ் அமைப்பின் தமிழ்த்தேர் இலக்கிய மாத இதழின் நான்காவது ஆண்டு விழா மற்றும் “சுப்ரமணியபுரம்” திரைப்பட குழுவினருக்கு பாராட்டு விழா, துபாய் சஃபா பார்க் அருகில் உள்ள எமிரேட்ஸ் இங்கிலீஸ் ஸ்பீக்கிங் பள்ளியின் உள்ளரங்கில் நடைபெற்றது.


விழாவின் சிறப்பு விருந்தினர்களாக முனைவர்.பர்வின் சுல்த்தானா, கவிஞர்.யுகபாரதி மற்றும் சுப்ரமணியபுர பட இயக்குனர் சசி, நடிகர் ஜெய், இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன், “கண்கள் இரண்டால்” பாடல் புகழ் பாடகர் பெல்லிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பார்வையாளர்களின் ஒரு பகுதி...விழாவிற்கு சேர்த்தது மேலும் சுருதி...

வந்தே மாதரம் பாடலுக்கு குழந்தைகள் ஆடிய காட்சி பாடல் முடிந்ததும் விழாவின் சிறப்பு பகுதியாக ஆஸ்கார் புகழ் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி கவுரவிக்கும் விதமாக அனைவரும் எழுந்து நின்று கரகொலி ஒலித்த காட்சி விழாவிற்கு சேர்த்தது மேலும் மாட்சி.

சங்கே முழங்கு பாடலுக்கான ஆடல்...
ஆண்டு விழா மலருடன் அனைவரும்...
மேடையில் பிரபலங்கள்
கவிஞர் யுகபாரதி மற்றும் முனைவர் பர்வின் சுல்த்தானா

சுப்ரமணியபுர பட இயக்குனர் சசி, மற்றும் நடிகர் ஜெய்

இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் மற்றும் இயக்குனர் சசி
ஜேம்ஸ்வசந்த் நடத்திய "தமிழ்ப்பேசு தங்கக்காசு" பாணியில் நடத்திய
"தமிழோடு விளையாடு"
"த்வனி" அமைப்பு சார்பாக "தமிழ்த்தேரின்" படைப்பாளர்களை பதக்கம் அணிவித்து கௌரவித்த மாட்சிகளை படம் பிடித்த காட்சிகள்...

விழா அரங்கிற்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "ப்ரைம் மெடிகல் சென்டரின்" இலவச மருத்துவ முகாம்.

குடந்தை அசரப், திண்டுக்கல் சரவணன் மற்றும் திருச்சி சரவணக்குமாரின் நகைச்சுவை விருந்து மற்றும் ஜேம்ஸ்வசந்தின் தமிழோடு விளையாடு நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவுற்றது.

விழா இரவு பதினொரு மணிவரை சென்றாலும் மக்கள் ஒரு இலக்கிய கலை விழாவைக் கூட்டம் கலையாமல் ரசித்துப் பார்த்த விதம், விழாவிற்கு கிடைத்த இரட்டைச்சதம்.

Related Posts with Thumbnails