8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள்ளி… பொம்பளை புள்ளைங்களோட சேர்ந்து படிச்சாலும் எப்ப பார்த்தாலும் பசங்களும், பொண்ணுங்களும் எலியும் பூனையுமா சண்டை போட்டுக்கிட்டு தான் இருப்போம்..!
வெற்றிடமான நட்புகாலம்..! (பள்ளிக்கூட நினைவுகள்..)
8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள்ளி… பொம்பளை புள்ளைங்களோட சேர்ந்து படிச்சாலும் எப்ப பார்த்தாலும் பசங்களும், பொண்ணுங்களும் எலியும் பூனையுமா சண்டை போட்டுக்கிட்டு தான் இருப்போம்..!
Posted by
கீழை ராஸா
at
8
comments
வாழ்வில் தொடர் தோல்வி அடைந்தோருக்கு சச்சின் ஒரு பூஸ்ட்...:-)
சச்சின் ஒரு சகாப்தம்
”99 முறை பெற்ற வெற்றியை கூட 100வது வெற்றியின் மூலம் தான் தக்க வைத்த்துக் கொள்ள முடிகிறது..! இந்த வாழ்க்கை ஓட்டத்தில் நம் வேகம் குறைந்தால் ஒரு பய மதிக்க மாட்டான், என்பதற்கு இதை விட என்ன சாட்சி வேண்டும்..? சச்சின் சாதிச்சிட்டேப்பா...:-) ”
சச்சின் நூறாவது நூறு அடித்த மறு நொடி , என் முகப்புத்தக சுவற்றில் நான்எழுதியது ஸ்டேடஸ் இது.
ஒவ்வொரு சாதனையாளனுக்கு பின்னும், சொல்ல முடியாத எத்தனையோ வேதனைகள், சோதனைகள், அவமானங்கள், விம்மிக்கொண்டிருக்கும்..சச்சின் படைத்த சாதனையும் அப்படித்தான்...இன்று உலகமே அவரை ஒருசாதனையாளராக கொண்டாடிக் கொண்டிருந்தாலும் அவர் வாழ்வின் ஆரம்ப நாட்களோ மிகவும் சோதனை நிறைந்தது.
· 1988 - பத்தாவது தேர்வில் தோல்வி.
· 1989 – இந்திய அணியில் இடம் பெற்று ஆடிய முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் 0 ரன்கள்.
.இப்படித்தான் சச்சினின் ஆரம்ப நாட்கள் இருந்தன. 1989 ஆண்டு அணியில் இடம் பெற்றிருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் அவர் முதல் சத்த்தை அடித்தது 1994-ல் தான். ஒரு சதத்தை எட்ட அவர் ஆறு வருடங்கள் போராட வேண்டியிருந்தது.
தொடர் தோல்விகள் அவரை பதப்படுத்தியதே ஒழிய பயம் கொள்ளச் செய்யவில்லை. அதன் பின் படிப்படியாக மின்ன ஆரம்பித்தார்...கிரிக்கெட் உலகின் மொத்த பார்வையும் அவர் மீது திரும்பியது.

”நான் ஆடுகளத்திற்குள் நுழையும் போது, நான் தான் முக்கியமானவன் என்று எண்ணிக் கொள்வேன். என் கையில் தான் இந்த ஆட்டம் இருக்கிறது. அணியை தூக்கி நிறுத்த வேண்டியது என் கடமை. என்று என்னை நானே தயார் செய்து கொள்வேன்...”
என் நினைவில் நிற்கும் சச்சினின் ஒரு பேட்டி இது.. இதை சொன்ன போது சச்சின், இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும் படி பெரிய ஆள் ஒன்றும் இல்லை... ஆனால் அந்த நம்பிக்கை நாளாக நாளாக உண்மையானதென்னவோ மறுக்க முடியாத உண்மை.
சச்சினின் சாதனைகளை பட்டியலிட்டு சென்றால், இந்த கட்டுரை 100 பகுதிகளைத் தாண்டிப் போகும். உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒர் இந்தியனாக தனக்கென்று ஒர் இடத்தை தக்க வைத்துக் கொள்வதே பெரும் சாதனை என்ற நிலையில், அந்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து, தலைக்கனமில்லாத ஒரு சிறந்த வீரர் சச்சின் என்றால் மிகையில்லை.

சச்சின் வெற்றியாளராக மிளிர்ந்த வேளை கூட, ஊடகங்கள் அவரை விடவில்லை. அவரை இட்டுக்கட்டி எழுதி, ஒரு கேவலமான விளம்ப்ரங்களைத் தேடிக் கொண்டது. அதில் ஒன்று, அவர் சதம் அடித்தால், இந்திய அணி தோற்று விடும் என்ற அறிவியல் உண்மை. ஆனால் உண்மை அப்படி இல்லை.
ஒரு நாள் போட்டிகளில் ச்ச்சின் அடித்த 49 சதங்கள் நிறைந்த போட்டிகளில் இந்திய அணி 34 முறை வெற்றிகளையும், 13 முறை தோல்விகளையும், இரண்டு டிராக்களையும் பெற்றுள்ளது. அதாவது சச்சின் சதமடித்த 70% போட்டிகளில் இந்தியா மகத்தான வெற்றியை பெற்றது என்பதே, புள்ளி விபரம்.
இது போன்று டெஸ்ட் தொடர்களில் இதுவரை, சச்சின் அடித்த 51 சதங்கள் நிறைந்த போட்டிகளில் இந்திய அணி, 20 வெற்றிகள், 11 தோல்விகள் மற்றும் 20 டிராக்களையும் பெற்றுள்ளது. அதாவது சச்சின் சதமடித்த 78% போட்டிகளில் இந்தியா தோல்வியை தவிர்த்துள்ளது.
இதையே சச்சின் சதமடித்தால் இந்தியாவிற்கு தோல்வி தான் என்று ஊடகப் பகுத்தறிவாளர்கள்(!!?) பரப்பி வருவது...உண்மைக்குப் புறம்பானது.என்பதை எத்தனை பேர் அறிவர்..?

அதிலும் 100வது சதத்தை அடிக்க, அவருக்கு ஊடகங்கள் கொடுத்த நெருக்கடி கொஞ்சம் நஞ்சமில்லை...சச்சின் அவ்வளவு தான்..அவரால் இந்த சாதனையை நிகழ்த்த இயலாது...இப்படி அவரை மனதளவில் பாதிக்க முயன்றோர் ஏராளம்..கடைசியில் ”அது” நிகழ்ந்து விட்டது.
நான் கிரிக்கெட் கடவுள் அல்ல, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். கடந்த22 ஆண்டுகளை கடந்த பிறகும், கிரிக்கெட் கடவுள் என்னை கடந்த ஒராண்டாக சோதித்து வந்ததாக கருதுகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்த சாதனையை எண்ணி பல முறை மனம் வெறுத்திருக்கிறேன். ஆனால் அதனால் சோர்ந்து போனதில்லை.
அது போன்ற சாதனைகளை கடப்பது அவ்வளவு எளிதல்ல. சாதனைகளை கடப்பவர்களுக்கு மட்டுமே அதன் கஷ்டம் எப்படிப்பட்டது என்பது தெரியும். நான் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் ஆடவில்லை. சாதாரணமாக ஆடும் போது சாதனைகளையும், மைல்கல்களையும் கடக்க முடிகிறது. எத்தனை சதங்கள் அடிக்கிறோம் என்பது முக்கியமல்ல. அணியின் நலனே முக்கியம்.
இளைஞர்கள் கனவுகளை துரத்த வேண்டும். கனவு நிச்சயம் நிறைவேறும். எனது கனவு 22 வருடங்களுக்கு பிறகு உலககோப்பையை வென்றபோதுதான் நிறைவேறியது.
தன் நூறாவது சதத்திற்கு பிறகு சச்சின் கொடுத்த பேட்டி இது.
பங்களாதேசத்திற்கு எதிராக சச்சின் நூறு ரன்களைத் தொட்டு விட்டு, வானத்தை நோக்கிப் பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டார்...அந்த மூச்சிக் காற்றில் அவரைப்பற்றிய அவதூறுகள் பொசுங்கிப் போயிருக்கும்...
என்றாளும் சாதனையாளர்களுக்கு ஒரு போதும் ஓய்வில்லை என்ற வகையில், சச்சின் மீதான அடுத்த எதிர்பார்ப்பாக, ஒரு நாள் போட்டிகளில் அவரின் 50வது சதத்தை எதிர்நோக்கி இருக்கும் அவர் ரசிகர்களும், ஊடங்கங்களும்...:-)
Posted by
கீழை ராஸா
at
5
comments
Labels: கிரிக்கெட், சச்சின், விளையாட்டு
நீங்கள் புகைப்பழக்கம் உள்ளவரா..? இல்லாவிட்டாலும் படியுங்கள்...
புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி, அதை விட்டு விட முயற்சிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இந்தப் படைப்பை காணிக்கையாக்குகிறேன்.
புகைப்பயணம்…
இன்று அலுவலகத்தில் வேலை சற்று அதிகம்…லேசாக பசியெடுக்க நிமிர்ந்து உட்கார்ந்தேன்…
“என்ன வினோத் மணி ரெண்டாயிடுச்சே சாப்பிடலே..?”
அட இரண்டாயிடுச்சா..?நேரம் போனதே தெரியவில்லை..! முன்பெல்லாம் லஞ்ச் டைம் எப்ப வருமென்று ஆவலாக இருக்கும், கடந்த ஒரு வாரமாக ஏண்டா லன்ஞ் டைம் வருதென்று தோன்றியது…காரணம் ‘நான் புகைப்பதை விட்டு ஒரு வாரம் ஆகிறது..’

மெதுவாக எழுந்து டைனிங் வந்தேன்… எல்லொரும் சாப்பிட்டு விட்டு சென்றிருந்தார்கள்…டிபனை பிரித்தேன்…சிக்கன் மணத்தது…என் மனைவியைப் பாராட்டிக் கொண்டேன்…
சாப்பிட்டு முடிந்ததும் கால்கள் வழக்கம் போல சிட் அவுட் சென்றது, அது தானே நம்ம ஸ்மோக்கிங் ப்ளேஸ்..” இது புகைப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி” என்று எழுதப்பட்ட வாக்கியத்தை பார்த்து சிரித்துக் கொண்டேன். இது போன்ற விசயங்களில் சட்டத்தை மீறி செய்வதே ஒருவகையான “கிக்” தான்.வாய் நம நமத்தது..” கன்ட்ரோல், கன்ட்ரோல், என்று மனசு சொன்னது.
வெளியே போய் வரலாம் என்று கிளம்பினேன்..லிப்டில் கீழே இறங்கி அலுவலக அருகில் உள்ள பெட்டிக்கடை நோக்கிச் சென்றேன், வெயில் இல்லாமல் வானம் மந்தமாக இருந்தது.
“ ஒரு பபுள் கம் தாப்பா”
“அட வினோத் சார் என்ன சார் உங்களை ஆளையே காணோம்...? என்ன சின்னப் பிள்ளை மாதிரி பபுள்கம் எல்லாம் கேட்குறீங்க..? பொட்டி வேணாமா?”
“சும்ம ஜோக் அடிக்காதீங்க சார்..எனக்குத் தெரிஞ்சு நம்ம கஷ்டமர் ஒருத்தர் 20 முறை தம்மடிக்குறதை விட்டிருக்கிறார்... இதுவே அவருக்கு பொழுது போக்கு...”
சிரித்துக் கொண்டேன் ‘யாருகிட்டே சொன்னாலும் இந்த விசயம் காமெடியாகி விடுகிறது என்ன செய்ய..?
“நான் அப்படி இல்லை நீ பார்க்கத்தானே போறே..?”
“போங்க சார், இது போல உதார் விட்ட நிறைய பேரை பார்த்துட்டோம் ...”
எனக்கு கோபம் கோபமாக வந்தது...
பபுள் கம்மை மென்றபடி நடந்தேன்.
அலுவலக வேலையில் மூழ்கிய வேளையிலும் கூட இணையத்தில் அவ்வப்போது புகைப்பிடிப்பதின் தீமைகளால் ஒரு வருடத்திற்கு 5, 00,000 நபர்கள் புகைப்பிடிப்பதானால் மட்டும் இறக்கிறார்கள்.புகைப்பிடிப்பவர் சராசரியாக தன் வாழ்நாளில் 14 வருடங்களை இழக்கிறார்…93% கேன்சரினாலான மரணம் புகை பிடிப்பதனாலேயே நிகழ்கிறது என்ற விபரங்களைப் படித்ததுடன் , புகைப்பதை விட்டு எத்தனை மணி நேரம், நிமிட நேரம், நொடி, நேரம் என்று கணக்குப்பார்த்து கிட்டத்தட்ட 10080 நிமிட நேரம் சிகரெட் இல்லாமல் என்னால் இருக்க இயலுகிறது என்று என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.
அதிசயம் பஸ்சில் ஏறியதும் இடம் கிடைத்தது …அதுவும் சன்னல் ஓரத்தில்…
லேசான காற்று மழைத்தூரலுடன் முகத்தி வீச உடல் சொல்ல முடியாது உணர்வில் மனம் தத்தளித்தது..
இந்த தருணத்தில் ஒரு சிகரெட்டை இழுத்தால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்று மனம் சற்று தடுமாறியது.
முன்னால் இருந்த வாகனத்தின் உறுமலில் புகை மூச்சு முட்டியது…புகை பிடிக்காதீர்..என்று வாகனத்தில் எழுதப்பட்ட கட்டளையை செயல்படுத்த இயலவில்லை.
கரும்புகையாக காற்றில் கலந்து கொண்டிருந்த அந்தப் புகை என் புகைப்பழக்கத்தின் ஆரம்ப காலத்துக்கு என்னை இழுத்துச் சென்றது.
அப்போது நாங்கள் எங்கள் சொந்த ஊரில் இருந்தோம்,. இராமநாதபுர மாவட்ட பரமக்குடி பக்கத்தில் உள்ளது எங்கள் கிராமம்.ஆறாவது படிக்க ஊரில் வசதி இல்லாததால் ஆற்றை கடந்து பரமக்க்குடிக்கு சென்று படிப்போம். அப்போது தான் புகை எனக்கு பழக்கமானது.நான் பார்த்த எங்களூர் பெரிய மனிதர்கள் எல்லோரும் கையில் ஒரு பெரிய தீக்கட்டையுடன் இருந்ததால் எனக்கு அந்த வயதில் புகைபிடிப்பது பெரிய மனுசனாவதற்கான அடையாளமாகவே சித்ததிக்கப் பட்டது.
எங்களூர் நாட்டாமை பெரிய சுருட்டோடு காட்சி தருவார்..எங்கள் வாத்தியாருக்கு செய்யது பீடி இல்லாமல் இருக்க இயலாது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிகரெட் வித்தைக்கு நான் பெரிய ரசிகன், எங்க ஐயனார் சாமிக்கு கூட சுருட்டு படையல் தான் ரொம்ப பிடிக்குமாம்.. என்பதால் புகை பிடிப்பது என்க்கு ஒரு கௌரவப் பொருளாகவே பட்டது.
பள்ளிக்கு நடந்து செல்லும் போது வழியில் கிடைக்கும் கருவேலமர வேர் தான் என் முதல் சிகரெட்..! வேரின் நுனியில் தீயை பற்றவைத்து உள்ளிழுத்து ரஜினி ஸ்டைலில் அதை வெளியிடும் போது, அந்த நொடி வந்து போகும் அந்த பெரிய மனுச தோரணைக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
ஒரு நாள் ‘வேர்’ சிகரெட் புகைத்து கொண்டிருந்த் போது அப்பா பார்வையில் பட்டு விட்டேன்…மாலை வீட்டில் ராஜமரியாதை…அப்பா அடிக்க வில்லை ஆர்ப்பாட்டம் காட்ட வில்லை, என்னை ஒரு இருக்கையில் அமரச் சொன்னார். ஒரு வெளிநாட்டு சிகரெட் அவர் கையில் இருந்தது.பொறுமையாக பேசினார்…
“வினோத், நான் எல்லா அப்பா மாதிரியும் இல்லை,உன்னோட நண்பனாகத்தான் பழகுறேன், உனக்கு புகைபிடிக்க ஆசை யிருந்தா இந்தா இதைக்குடி , கண்டதையும் குடித்து உடம்பை கெடுத்துக் கொள்ளாதே அப்பா வெளிநாட்டு சிகரெட்டை கையில் திணித்தார்…ஃபில்டர் வைக்கப்பட்டது..என் கனவு சிகரெட் இப்போது என் கையில்…இருந்தாலும் எனக்கு அழுகை, அழுகையாக வந்தது.அப்பா என்னையே உற்றுப் பார்த்து கொண்டிருந்தார்…அவர் நல்லவர் சில நிமிட மௌனத்திற்குப் பிறகு அந்த் சிகரெட்டை உடைத்துப் போட்டேன்..
பொட்டைப்பயனாடா நீ..?ஒரு தம்மடிக்கக்கூட தெரியாதா உனக்கு ? இப்படி என் ஆண்மையைத் தூண்டி விடப்பட்ட வார்த்தை ஜாலங்கள் என்னை மாற்றியது… ஒரு நேரத்தில் என் வீரத்தை பறைசாற்றிக் கொள்ள சிகரெட் மட்டுமே உதவியது..வசதியான பசங்க எல்லாம் பைக்கை வைத்து 8, 16 என்று போட்டு பிகர்களை மடக்கி கொண்டிருத போது, என் போன்ற மிடில் கிளாஸ்களுக்கு சிகரெட் புகையில் இடும் வட்டங்கள் தான் பிகர்கள் மடக்கும் ஆயுதம் என்பதால் அந்த வயதில் அது எனக்குப் பெரும் தகுதியாகவே பட்டது.
”டாடி இந்த வாடையே எனக்குப் பிடிக்கலை, இதை எப்ப தான் விடப்போறீங்களோ ?“ என்று என் மகள் கேட்கும் போது கூட தலை குனிந்து கொள்ளத்தான் முடிந்தது,,,ஆனால் இந்தப்பழக்கத்தை விட்டு விடலாம் என்று எண்ணக்கூட என் மனம் துணிய வில்லை காரணம் அந்த அளவு இந்தப்பழக்கம் என்னை ஆட்க்கொண்டிருந்தது.
அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று இந்த வருடம் எல்லாம் நலமாக என் மகளின் 10 வது பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டா ஏற்பாடு செய்தேன்..நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது வீடு நிறைய அன்பளிப்புகள்.. மகள் திக்குமுக்காடி போனாள்.,,
“ என்ன சனா திருப்தி தானே..?”
“திருப்தி தான் ஆனால் நீங்க ஒன்றும் வாங்கித்தரலையே ?”
“பளார் “ என்று அறைந்தாற் போல் இருந்தது, நம்ம திருப்திக்காக செய்து கொள்ளும் இந்த பிறந்த நாள் விழா ஏற்பாடுகளில் குழந்தைகள் திருப்தி அடைவதில்லை..என்ற எண்ணம் உள்ளே குத்தியது..
“சரி உனக்கு என்ன வாங்கி வேண்டும்”
“எனக்கு ஒண்ணும் வாங்கி வேண்டாம்”
“பின்னே”
“நீங்க என் பிறந்த நாள் பரிசாக சிகரெட் குடிப்பதை நிறுத்தணும்…”
பகீரென்றது எனக்கு…இப்படி கேட்பாள் என்று நான் நினனத்து கூட பார்க்க வில்லை…
“சொல்லுங்கப்பா…”
“நீ கேட்டு உங்கப்பா இல்லைன்னு சொல்லுவாரா..?கண்டிப்பாக விட்டு விடுவார்” குத்தலுடன் என் மனைவி.
நீண்ட அமைதிக்குப் பின்னர், “விடுகிறேன்” என்றேன்.
ர்ர்ர்ர்ர்ர்ர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வண்டி உறுமலில் நிகழ்காலம் வந்தேன்.
ஹோண்டாவில் உறுமிய படி பீட்டர் என் கல்லூரி நண்பன்.
“ அட என்ன இந்தப் பக்கம்”
“இல்லே மச்சி மழையினாலே வண்டி எடுத்து வரலே…சரியான ட்ராபிக் சோ கொஞ்சம் நடக்கலாமேன்னு.. ஆமா நீ...?”
“நான் பக்கத்துலே தான் தங்கியிருக்கேன்..இன்னிக்கு கிளைமேட் சூப்பரா இருக்கிறதாலே சரக்கேத்தலாம்னு கிளம்பிட்டேன்..வாடா வண்டியிலே ஏறு பக்கத்திலே தான் …”
“இல்லைடா வேணாம்”
“ அடச்சீ, பழசை எல்லாம் மறந்துட்டியா..? காலேஜ் டைம்லே பீர் அடிக்கிறதுலே உன்னை மிஞ்ச முடியாதே இப்ப என்ன நல்லவனா வேசம் போடுறே ஏறுடா..”
பார் கலை கட்டியது.
“அவன் ஒரு ஹாட்டும், நான் ஒரு பீரும் ஆர்டர் பண்ணினோம்”
வித விதமான சிகரெட் வாசனை என்னை சலனப்படுத்தியது.அவன் ஒரு தம்மை பற்ற வைத்தபடி , என்னை நோக்கி பாக்கெட்டை நீட்டினான், அவசரப் பட்டு மறுத்தேன்.
“வேணாண்டா நான் ஸ்மோக் பண்ணுறதை விட்டு விட்டேன்”
சிரித்தான், சத்தம் போட்டு சிரித்தான்.
“என்னடா காமெடி பண்ணுறே”
“சீரிஸ்ஸா மச்சி நான் சிகரெட்டை விட்டு விட்டேன்”
“எத்தனையாவது முறை..?”
“பர்ஸ்ட் டைம்”
சிரிப்பு தொடர்ந்தது..
அதன் பின் ஆர்டர் வர அதில் பிஸியானோம்.
சிகரெட் பிடிப்பதில் ஆரம்பத்தில் இருந்த உறுதி முடிக்கும் போது இல்லை.இரண்டு பீர் இறங்கியதும் வாய் நம நமக்க தானாகவே பீருடன் சிகரெட்டும் சேர்ந்து கொண்டது.
“மச்சி புகைப்பிடிக்காதீர்ன்னு போர்டு வச்சிருக்கிறதைப் பார்த்தா எனக்கு காமெடியா வருதுடா நாம தான் புகையை வெளியே விட்டுவிடுகிறோமே அதை எவன் புடிச்சா நமக்கென்ன ?”
ஹா..ஹா..ஹா சத்தமிட்டு சிரித்தோம்.
டெலிபோன் பாடல் ஒலித்தது.
“வீட்டுலே இருந்து போன் ..இந்த பொண்டாட்டிகளுக்கு நாம நிம்மதியா வெளியே இருந்தாலே பிடிக்காதுடா மச்சி” கட் பண்ணினேன்.
டங்க் டங் டங் என்று பாரில் சத்தமான மியூசிக்கில் உள்ளம் குதித்த்து…
மீண்டும் போன் ஒலித்தது…
“ அவ விட மாட்டா மச்சி எத்தனை முறை கட் பண்ணினாலும் அடிப்பா”
போனை எடுத்தேன்…
எதிர்முனையில் என் மனைவி அழுதபடி,
"என்னங்க நம்ம சனா டியூசன் படிக்க போன பில்டிங்லே எதோ தீ பிடிச்சுகிச்சாம்…எனக்கென்னவோ பயமா இருக்குங்க…நீங்க எங்கே இருக்கீங்க? "
போதை சர்ரென்று இறங்கியது..
“இதோ வந்துடறேன் வசந்தி..நீ பயப்படாதே”
அங்கிருந்து கிளம்பி ஆட்டோவில் வந்து சேர்ந்தேன்…தீ உக்கிரமாக எரிந்து கொண்டிருந்த்து..ஒரே கூச்சல் குழப்பம்..
“வாத்தியார் மாடியிலே குடிசை போட்டி டியூசன் நடத்தியிருக்கார்..எப்படி தீப் பிடிச்சதுன்னு தெரியலையப்பா, ஆனா எரியுறதைப் பார்த்தா பலத்த உயிர் சேதம் தான்னு தோணுது.”
“கும்பகோண மேட்டருக்கு அப்புறம் குடிசைப் பள்ளிகூடம் இருக்க்க் கூடாதுன்னு ரூல்ஸ் போட்ட அரசாங்கம் இது போன்ற டியூசன் செண்டரை தடுத்திருக்கனும்பா இப்ப பாரு எப்படியும் முப்பது நாற்பது குழந்தைகள் இருப்பார்கள் போல..”
“ பக்கத்துலே ஒரே பேச்சுலர் பசங்க எவனாவது தம்மடிச்சுட்டு அணைக்காமே போட்டிருப்பானுங்க அது தான் இந்த விபத்திற்கு காரணம்..”
“ஆமாம்பா இதுக்குத்தான் இந்த பேச்சுலர் பசங்களை குடி வைக்ககூடாது என்கிறது… "
வீட்டினுள் சென்ற தீயணைப்பு படையினர் கரிக்கட்டைகளாக சில உடல்களை கொண்டு வந்து கொட்டினார்கள் ஒரே பதட்டம், கும்பல் ஓடிச் சென்று அடையாளம் காண முயன்றது.
“சனா” என்று கதறியபடி என் மனைவி ஓடினாள், எரிந்தும் எரியாமலும் இருந்த சிகப்புக்கலர் பாவாடையால் சனாவை அடையாளம் காணமுடிந்தது. என் மனைவி கதறினாள் என்னால் அடக்க இயலவில்லை… ஒரே கூச்சல் குழப்பம்…
மயக்க நிலைக்கு தள்ளப்பட்ட ஆம்புலன்சில் கையை முட்டுக் கொடுத்து சரிந்தேன்…
“சனா இனி ஒரு போதும் புகைபிடிக்க மாட்டேனம்மா..” என்று உள்ளுக்குள் கதறியபடி, முகம் பொத்தி அழுதேன்…அது கண்டிப்பாக என் சனாவிற்கு கேட்டிருக்கும்.
Posted by
கீழை ராஸா
at
15
comments
Labels: கதை, சிறுகதை, புகை, புகைப்பழக்கம்
துபாய் கோம்போ மீல்-1 (சவர்மா கடிக்க, சுலைமானி குடிக்க)


சமீபத்தில் அமீரகத்தில் ஒரு விழா முடிந்த தருவாயில் அதிகாலையிலேயே பதிவர் குசும்பன் என்னை அழைத்திருந்தார்...என்ன காலையிலேயே ? என்றேன்.
*************
பதிவில் நாம் எழுதியதெல்லாம் யார் படிக்கப் போகிறார்கள்..? என்ற எண்ணம் எனக்கு அவ்வப்போது ஏற்படுவதுண்டு, அதைத் தகற்கும் வகையில் அவ்வப்போது எனக்கு வரும் தனிமடல்கள் என் எழுத்து தீயிற்கு எண்ணெய் ஊற்றுவதாகவே அமையும்.
அந்த வகையில் சமீபத்தில் திருச்சி சையது வெளியிடப்போகும் "நட்புக்காக" சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 26 சிறந்த எழுத்தாளர்களின் கதைகளில், என் கதையான "சிறகு தொலைத்த சிட்டுக் குருவிகள்" இடம் பெறுவதுடன் அதற்கு அணிந்துரை எழுதிய பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழியல் துறைத் தலைவர் பேராசிரியர் எழில்வேந்தன் அனைத்து கதைகளிலும் இது முடி மணியாகத் திகழ்கிறது என்று பாராட்டியிருப்பது, மற்றும் என் கதைகளில் சிலவற்றைப் படித்த பிரபலங்களில் சிலரான பேராசிரியர் பெரியார் தாசன் அப்துல்லா, கவிச்சித்தர் மு. மேத்தா, காவியத்திலகம் ஜின்னாஹ் சரியுத்தீன் ஆகியோர் நீங்கள் கண்டிப்பாக சிறுகதைத் தொகுப்பு வெளியிட வேண்டுமென்று என்னிடம் உரிமையுடன் என்னிடம் கேட்டுக் கொண்டது, போன்ற நிகழ்வுகள் எனக்கு மேலும் மேலும் எழுத வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவே உள்ளது.
ஆனால் அதற்கான ஒரு நேர்த்தியான நேரம் கிடைக்காத வேளையில்,இந்த வெள்ளிக் கிழமை பதிவர் பாஸ்ட் பௌலர் நவ்பலுடன் பேசிக்கொண்டிருந்த போது, கிரிக்கெட் சம்பந்தமாக அவர் உட்பட சில பதிவர்கள் இணைந்து எழுதிவரும் "ஆடுகளம்" வலைப்பூவில் நீங்களும் எழுதுங்களேன்...என்று விளையாட்டாய் கேட்டது வினையாக மாறி விட்டது..:-) மீண்டும் அடித்தாட ஒரு வாய்ப்பு,

Posted by
கீழை ராஸா
at
14
comments
Labels: அனுபவம், துபாய், துபாய் கோம்போ மீல், பதிவர் வட்டம், பொது
மரணம் தேடிப் பறந்த மனிதப்பறவைகள்…
தரையிறங்குமென்றபோது
எவரும் அறியவில்லை
அப்படி ஒரு செய்தி இடியென
தலையிறங்குமென்று..
பத்தாயிரம் மைல்கள்
பதனமாக வந்த பயணம்
பத்து மைல் இருக்கையிலே
பாவியவன்
பாசக்கயிற்றில் சிக்கியதே
தியாகத்தில் இவர்கள்
தீக்குச்சிகள்..என்பதாலோ
தீப்பெட்டியாக விமானம்
தீப்பற்றிக் கொண்டனவோ..?
எரிந்தது நீங்கள் மட்டுமல்ல
ஏக்கங்களும் கனவுகளும்
மரித்தது நீங்கள் மட்டுமல்ல
ஆசைகளும், உணர்வுகளும்…
தகவல்கள் எரியாது காக்க
எதையும் தாங்கும்
கருப்புப் பெட்டியாம்..!
உயர்வான உயிர்களைக் காக்க
உதவாக்கரை
உலோகப் பெட்டியாம்..!
உறக்கமில்லா இரவுகளில்
உழைத்திட்ட இம்மக்களென
உறங்கழைத்துச் சென்றானோ?
உலகம் காக்கும்பேரிறைவன்
இரக்கமில்லா இந்நிகழ்வை
இன்னும் பலர் நம்பாமல்,
ஏர் இந்தியா என்றாலே
எப்போதும் தாமதம் தான்
என்றெண்ணிக் காத்திருப்போர்
ஏர்போட்டில் ஏராளம்…
இயற்கையை நம் கையில்
எடுத்திட்ட பெருமிதத்தை
இது போன்ற சம்பவங்கள்
தடுத்திடச் செய்கிறதே..
பறவையின் பறக்கும்குணம்
பார்த்து செய்த விமானம்- இவர்கள்
உலகை விட்டு பறக்கையிலே
உதவிக்கு வரவில்லையே…?
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
செத்தாலும் ஆயிரம் பொன்
இவர்களும் யானைகள் தான்…
இருக்கும் போது தன் ஆசைகள்
எரித்து குடும்பம் காத்தார்கள்
செத்தபோது தங்களை எரித்து
குடும்பம் காக்கிறார்கள்…
பறந்து சென்று பணம்தேடி-பந்தம்
துறந்து தனம் தேடி
இறந்து சென்றும் இனம் காத்ததால்
இவர்களும் சீதக்காதியன்றோ…?
(சமீபத்தில் பெரியார்தாசன் என்றறியப்பட்ட அப்துல்லாஹ் அவர்கள் துபாய் வந்திருந்த போது, நீங்கள் கவிதை எழுதுவதை விட கதை எழுதுவதில் அதிக ஈடுபாடு காட்டுங்கள் அது தான் உங்களுக்கு நன்றாக வருகிறது என்றார் ( எனக்கு கவிதை வரவில்லை என்பதை அவர் பாணியில் சொன்னார்) அந்தப் பெரியவரின் வார்த்தைகளை மீறி இதை எழுதிவிட்டேன்...கவிதையின் அளவு கோலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும்...என் உணர்வுகளின் வடிகாலாகவே இதை வடித்துள்ளேன்.)
Posted by
கீழை ராஸா
at
10
comments
Labels: அஞ்சலி, கவிதை, கவிதை மாதிரி, துபாய், விமான விபத்து
பொங்கலோ...பொங்கல்
Posted by
கீழை ராஸா
at
20
comments
ஒரு எழுத்தாளனின் “அவதார்”
நான் தாங்க மாதவன். சிறுகதை எழுத்தாளர் மாதவன்னு சொன்னா உங்க எல்லோருக்கும் தெரியும்.நூற்றுக்கும் மேலே சிறுகதைகள் எழுதி பல சிறுகதைகளுக்குப் பரிசும் பாராட்டுக்களும் பெற்றவன் என்றாலும் என் மனைவிக்கு மட்டும் என்னைத் தன் கணவனாக மட்டுமே அடையாளம் தெரியும்..சமீபத்தில் விபசாரத்தை மையமாக வைத்து நான் எழுதிய “சிகப்பு கனவுகள்” என்ற கதை ஊரெல்லாம் பாராட்டுப் பெற என் வீட்டில் எனக்குக் கிடைத்த வித்தியாசமான பாராட்டைத்தான் நீங்க இப்ப பார்க்கப் போறீங்க….
“ஏன் இப்படி அப்பிராணியா இருக்கே…எழுத்துன்றது ஒரு தனி உலகம், எந்த எழுத்தாளன், தான் எழுதப்போற கதாபாத்திரமா கூடு விட்டு கூடு பாய்ந்து எழுத முடியுதோ அவன் தான் சிறந்த எழுத்தாளன். நாளைக்கே நான் சாவைப் பற்றி ஒரு கதை எழுதுனா, செத்து அனுபவித்து தான் எழுதுவேன்னு சொல்ல முடியுமா..?
"இப்படி எதையாவது லெக்சர் பண்ணி என் வாயை அடைச்சிடுங்க…எதை எழுதுறதுன்னு வரைமுறை இல்லாமல் இப்படி கண்டவளையும் பத்தியும் எழுதுன்னா உங்க எழுத்தாளர் கூட்டம் வேணுமானா உங்களை மெச்சிக்கலாம் ஆனா உலகம் காரித் துப்பும்."
“நீ ஒரு எழுத்தாளனுக்கு மனைவியாக இருக்கத் தகுதி இல்லாதவள்” கோபத்தில் வார்த்தைகள் வெடித்தது.
“முதல்லே நீங்க ஒரு பொண்ணுக்கு நல்ல கணவனா இருங்க அப்புறமா எழுத்தாளனா இருக்கலாம்” பதிலுக்குப் பதில்
“உனக்கு நான் என்ன எழுதுனேன்னு தெரியாது உனக்கு படிக்கிற பழக்கமும் கிடையாது. பின்னே யாரு சொல்லி இப்படி பேயாடுறே…?”
“யாரும் சொல்லலை அந்த கன்றாவியை நானே படிச்சேன்”
என்னுள் ஆச்சரியம்…எத்தனையோ முறை என் எழுத்துக்களை அவளைப் படிக்கச் சொல்லி வற்புறுத்திய போதும் இதெல்லாம் எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லை என்று தட்டிக்கழித்தவள் இன்று அவளாகப் படித்தாளா..?!!
எனக்கு வார்த்தைகள் வரவில்லை அவள் தொடர்ந்தாள்.
“அது என்னங்க அவ ஜாக்கெட் தைக்க எத்தனை மீட்டர் துணிவேணுங்கறதிலே இருந்து அவ பிரா எந்த ப்ராண்டுங்கற வரை ஒரு கேவலமான வர்ணனை… இதுவெல்லாம் கற்பனைன்னு சொல்லுவீங்க நான் நம்பனும்…? “லேசாக விசும்ப ஆரம்பித்தாள்…
இந்த விசும்பல் தானே பெண்களுக்கு ஆண்கள் இதயத்தை பதம் பார்க்க்கும் ஆயுதம்…இனி என்ன சொன்னாலும் இவளுக்குப் புரியாது…

சத்தம் கேட்டு, தூங்கிக் கொண்டிருந்த என் ஐந்து வயது மகன் கண் விழித்தான்.
“ ஏம்மா அழறே..”
“எல்லாம் என் தலை விதி”
அவனுக்குப் புரியவில்லை…ஆனால் நான் சொல்ல வேண்டியதை அவள் சொல்கிறாள் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது..
“இப்ப நான் என்ன பண்ணவேண்டும்…” பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகக் கேட்டேன்.
“இனி நீங்க எழுதக்கூடாது“
இவ்வளவு பெரிய தண்டனையை எதிர்பார்க்க வில்லை. எனக்கு கோபம் சுளீரென்று ஏறியது….
“கழுதை, கழுதை, கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை…?” என்ற படி அந்த இரவில் சடாரென்று கதவைச் சாத்தியபடி வெளியானேன்.அங்கிருந்தால் மிருகமாகி விடுவேனென்றே தோன்றியது…
“போங்க போங்க எவ கூடயாவது போயி அடுத்த கதைக்கு ரெடி பண்ணிக்கிட்டு வாங்க…”
அவள் பின்னாலிருந்து கத்துவது தெருவில் கேட்டது…தெரு விளக்கும் நிலா வெளிச்சமும் கலந்த வெளிச்சத்தில் சாலை…தூரத்தில் நாயின் ஊளை…எங்கே செல்கிறோம் என்று தெரியாத நடை…
வினிதா நான் காதலித்து மணந்த மனைவி…காதலிக்கும் போது அவளுக்குப் பிடித்ததெல்லாம் எனக்குப் பிடிக்கும்…எனக்குப் பிடித்ததெல்லாம் அவளுக்குப் பிடிக்கும்…காதலுக்கு கண் கிடையாது அல்லவா…?
என்றாளும் என் எழுத்தில் மட்டும் அவள் ஆரம்பத்திலிருதே ஆர்வம் காட்டியதில்லை.படிப்பதென்றாலே அவளுக்கு அலர்ஜி.ஆரம்பத்தில் நானும் கண்டு கொள்ளவில்லை.அப்புறம் என் எழுத்துக்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டு ஊரே பாராட்டும் போது…அவளிடம் இருந்தும் சில எதிர்பார்ப்புகள் வர ஆரம்பித்தது…மற்றபடி எல்லாவற்றிலும் எனக்கு மிகப் பொருத்தமானவள். அன்பு காட்டுவதில் அழகான ராட்சஷி.
கோபம் சற்று குறைந்திருந்தது…சே அவசரப் பட்டு விட்டோமோ…நாம் செய்தது சரியா…? கதையை மனதிற்குள் மீண்டும் ஓட்டிப் பார்த்துக் கொண்டேன்.’சற்று அதிகமாகத்தான் போய் விட்டோமோ…?இருந்தாலும் அந்தக்கதை விபச்சார ஒழிப்பு சம்பந்தப் பட்ட தாயிற்றே…அந்த நல்ல விசயம் ஏன் அவள் கண்ணுக்குப் படவில்லை…?’
சில நாட்களுக்கு முன் “நீயா நானா..?” நிகழ்ச்சியில் கோபினாத் சொன்னது நினைவிற்கு வந்தது. நாங்கள் சுதந்திரமாக இருக்கக் கணவர்கள் அனுமதிப்பதில்லை என்ற மனைவிமார்களின் குற்றச்சாட்டுகளுக்கு அவர், இந்திய ஆண்கள் தன் மனைவி பற்றி சமூகம் ஏதும் தவறாகச் சொல்லி விடக்கூடாது என்பதற்காகத்தான் அப்படி செய்கிறார்கள்.. என்ற போது என் மனமும் ஆமோதித்தது…இப்போது அதையேத்தான் வினிதா செய்திருக்கிறாள்…தன் கணவன் பற்றி மற்றவர்கள் குறை ஏதும் கூறிவிடக்கூடாது என்பதற்காக…ஒரு குடும்பத்தலைவியாக இருந்து சிந்தித்த போது என் தவறு எனக்குப் புரிந்தது…
நாம் இறங்கிப் போகலாமா? தவறில்லை எத்தனையோ முறை அவளை காயப்படுத்திய போதும், உதாசீனப்படுத்திய போதும், சிறிதும் ஈகோ பார்க்காமல் “ உனக்கும் ரொமாண்டிக்கும் ரொம்ப தூரம் உன்னைப் போய் நான் ஏன் லவ் பண்ணினேனோ ? என்று கலாய்த்த படி என்னை சீண்டும் போது, முகத்தில் சிரிப்பை அடக்கி உம்மென்ன்று இருக்க முயற்சிக்கும் என்னை சிரிக்க வைக்கும் பல முயற்சிகளை எண்ணிப்பார்த்தேன்…அவளா?எழுத்தா? என்று வந்தால் எனக்கு அவள் தானே முக்கியம்…நீண்ட பெருமூச்சு விட்டேன்…என் கோபம் முற்றிலும் மறைந்திருந்தது…
வீடு திரும்பினேன்…அவள் முகம் திருப்பினாள்….
“நான் இனி எழுதப்போவதில்லை”
நீண்ட மௌனம் விடியும் வரை…

காலையில் இயல்பு நிலைக்குத் திரும்பினாள்…அதன் பின் அப்படி ஒரு நிகழ்வு நிகழ்ததாக அவள் காட்டிக் கொள்ளவில்லை…ஒரு வாரம் பத்திரிக்கை நண்பர்கள் என்ன எதுவும் எழுத வில்லையா? என்ற போது வேலை பளுவின் மீது பழி போட்டு தப்பித்தேன்…என் மனைவி சொன்னால் நான் எழுத வில்லை என்றா சொல்ல முடியும்…?
“எதுக்கு”
உங்களை எழுத வேண்டாமென்று சொன்னதுக்கு…”
மௌனம்
நீங்க மறுபடியும் எழுதணும்..”
“ இன்னிக்கு “கிளப்”பிளே ஒரு பொண்ணைப் பார்த்தேன்…அவங்க கணவனை விட்டுப் பிரிஞ்சி இருந்ததாகவும் உங்க கதை ஒன்றை படிச்சி அதனாலே சேர்ந்து இப்ப அவ்வளவு அன்னியோன்யமா இருப்பதாகவும் சொன்னாங்க வீட்டிலே வந்து படிச்சேன்…கணவன் மனைவி எப்படி இருக்கனும் என்பதற்கு அப்படி ஒரு உதாரணக் கதை அது…நீங்க எப்படியெல்லாம் என் கிட்டே ரொமான்டிக்கா இருக்கனும் என்று நினைக்கிறேனோ அதுக்கு ஒரு படி மேலே அந்த கதை இருந்தது… ஆனா நீங்க ஒரு முறை கூட என்கிட்டே அப்படி நடந்ததில்லை,ரொமாண்டிக் கிலோ என்ன விலை..?ன்னு கேட்கிற நீங்களா அதை எழுதினீங்கன்னு யோசித்தேன் அப்ப தான் எனக்கு புரிந்தது நீங்க எதையும் அனுபவிச்சி எழுதுறதில்லை எல்லாம் கற்பனைதான்னு…சாரி நான் தான் உங்களை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்…நீங்க நிறைய எழுதனும்…”
அவள் பேசிக் கொண்டே போக ஒரு எழுத்தாளனாகத் தலை நிமிர்ந்து, ஒரு கணவனாகத் தலை குனிந்தேன்.
Posted by
கீழை ராஸா
at
21
comments
















