பொங்கலோ...பொங்கல்



கடித்துத் தின்ன கரும்பில்லை
இனிப்புத் தின்ன எறும்பில்லை
மஞ்சள் பூச வழியில்லை
மாமன் மகளும் இங்கில்லை...

"சன்"னுக்குப் பொங்கல் அன்று
"சன்" டிவி தான் பொங்கல் இன்று
முகம் பார்த்த வாழ்த்துக்கள் அன்று
முகப்புத்தக வாழ்த்துக்களே இன்று..

இளமைக்கால பொங்கல் நினைவுகள்
இதயமெங்கும் வருடிட...
இனியத் தமிழ் நண்பர்களுக்கு என்
இதயப்பூர்வ பொங்கல் வாழ்த்துக்கள்...
-கீழைராஸா பாலையிலிருந்து....

20 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஹைய்யா நாந்தான் முதல்லயா ...

கிளியனூர் இஸ்மத் said...

தளபதியாரே
ஏன் இவ்வளவு சோகம்
பிரியாணி பொங்கி
பொங்கல கொண்டாடுவோமா?

பொங்கல் வாழ்த்துக்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மிகவும் எதார்த்தமான பொங்கல் வாழ்த்து ராஸாண்ணே.

காலைல நமீதா, அனூஸ்கா, சாலமன் பாப்பையா நிகழ்ச்சிகள்ல, பொது அறிவை வளர்க்கக் கூடிய விசயங்கள் இருப்பதால் தான் மக்கள் பார்க்கறாங்க. நீங்க வேற :))

வினோத் கெளதம் said...

அண்ணாத்தே கவிதை வெரி நைஸ்..ச்சோ ஸ்வீட்..
பொங்கல் வாழ்த்துக்கள்..:)

Unknown said...

//.. "சன்"னுக்குப் பொங்கல் அன்று
"சன்" டிவி தான் பொங்கல் இன்று

-கீழைராஸா பாலையிலிருந்து.... .//

அருமையான வரிகள்..

துபாய் ராஜா said...

பொங்கலோ பொங்கல்...

தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Saravanan Renganathan said...

:-)
ஹைக்கூனு போட்டு ஏமாத்திடிங்களே ...

Radhakrishnan said...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

கணினியையும், டிவியையும் விட்டுவிட்டு ஊரின் பாதைகளில் நடந்தால் பல முகங்கள் தெரிய வரலாம். வாழ்த்துகள் சொல்லியும் மகிழலாம்.

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு வாழ்த்துக்கள்...

விஸ்வாமித்திரன் said...

//இளமைக்கால பொங்கல் நினைவுகள்
இதயமெங்கும் வருடிட... //


Sathyamana varthaigal.
Keep it up

அப்துல்மாலிக் said...

//சன்"னுக்குப் பொங்கல் அன்று
"சன்" டிவி தான் பொங்கல் இன்று//

பொங்கல் மாத்திரமில்லை அனைத்து கொண்டாட்டங்களும் இன்று சின்னத்திரையின் முன் கழிகிறது..

அருமையான வரிகள்

திவ்யாஹரி said...

எங்க போனீங்க இவ்ளோ நாளா?

கீழை ராஸா said...

//Starjan ( ஸ்டார்ஜன் )
கிளியனூர் இஸ்மத்
ச.செந்தில்வேலன்
வினோத்கெளதம்
பட்டிக்காட்டான்..
துபாய் ராஜா
Saravanan Renganathan
வெ.இராதாகிருஷ்ணன்
அண்ணாமலையான்
விஸ்வாமித்திர மகரிஷி
அபுஅஃப்ஸர்
திவ்யாஹரி //

தங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி....

அன்புடன் மலிக்கா said...

நல்ல கவிதை.

நேரம்கிடைக்கும்போதுவந்து பாருங்கள்

http://fmalikka.blogspot.com/

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

காலமாற்றத்தின் நிகழ்வுகளில் கசங்கி போன இதயத்தின் வலியான நினைவுகள் வரிகளாகி பாமாலையாய் கோர்த்துக் கொண்டுள்ளது.

நல்ல கவிதை! பாராட்டுக்கள் கீழை ராஜா!

priyamudanprabu said...

வ்
மாமன் மகளும் இங்கில்லை...


/
/
இதுதாங்க முக்கியம்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

malar said...

நேற்று நடந்த அமீரக தமிழ் மன்றம் நிகழ்ச்சி ரொம்ப கால தாமதமாக தொடங்கி இரவு 11 .30 ம்ணிக்குமேல் கொண்டு சென்றீர்கள்..6 ல் இருந்து 10.30 வரை தான் இருக்க முடியும்.கடைசி நாங்க ரோகினி பேசியதை கேட்க்க வில்லை.இணையதில் பார்க்க முடியுமா?
இந்த மாதிரி நிகழ்சிகளை வியாழ்ன் வைப்பதே சிரந்தது.

Anonymous said...

Ohh Dear Really ExlentInformation Yours Blog.....

Related Posts with Thumbnails