மௌனம் தரிக்காத முத்த தருணம்...( கவிதை தெரிந்த இளசுகளுக்கு மட்டும் )

மு(மொ)த்தத்தில் மௌனமில்லா ஒர் இடம் …


உன் விழி என் விழி
ஊடுருவும் வேளை…
உன் விரல் என் விரல்
வருடும் மாலை…
விண்ணொளி உன்
கண்ணொளி கண்டு
ஒளிந்திடும் வேளை-நம்
உதடுகள் ஒட்டிக்கொள்ளும்
உன்னத மாலை…
மௌனம்…






உள்ளத்துள் ஆயிரம்
வார்த்தைகள் துடிக்க…
உள்ளுக்குள் வேதியல்
மாற்றங்கள் வெடிக்க…
எண்ணத்தில் உன் பிம்பம்
எட்டிப்பிடிக்க…
கட்டிப் பிடிக்க…வந்து விடும்
மௌனம்…





அடியே
மௌனப் பெண்ணே..!
வெட்கமில்லாதவளே…
தம்பதிகள் தனித்திருக்க…
உனக்கென்ன வேலையிங்கு…
போய்விடு மௌனப்பெண்ணே…
போய்விடு…
என்னவளின் மெலோடியஸ் குரல்
கேட்க வேண்டும்…
விழிமூடும் அந்த
முத்தத்தருணத்தில்…

Related Posts with Thumbnails