தமிழ் நிறுவனத்திற்கு துபாயின் உயரிய கௌரவமிக்க MRM விருது...

துபாயின் உயரிய கௌரவமிக்க "சேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம்" வியாபார விருது (Business Award), ரியல் எஸ்டேட் பிரிவுக்காக தமிழ் நிறுவனமான "ETA STAR PROPERTY DEVELOPER" நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

சென்ற வருடம் ரியல் எஸ்டேட் ஜாம்பாவனான "EMAAR" நிறுவனமே இந்த விருதை"TAMEER" மற்றும் "UNION PROPERTY" போன்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட போது இந்த வருடம் இந்த பிரிவின் விருதை ஒரே நிறுவனம் அதிலும் தமிழ் நிறுவனம் தட்டிச்சென்றது மேலும் சிறப்பு.



இன்று காலை துபாய் "மதீனத் ஜுமைரா" வில் நடந்த சிறப்பு மிக்க விழாவில்,
இந்த பெருமை மிக்க விருதை, அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், துபாயின் ஆட்சியாளருமான உயர்திரு. முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களிடமிருந்து ETA குழுமத்தின் தலைவர் "வியாபார விஞ்ஞானி" உயர்திரு.செய்யது சலாஹூதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

சென்ற வருடம் கட்டுமானப் பிரிவில் "ETA ASCON" இந்த விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது என்றாலும், உலக பொருளாதார வீழ்ச்சி எனும் சுழற்காற்று வீசிவரும் இந்த வேளையில் இப்படி ஒரு பெருமைமிக்க சாதனை விருதை தட்டிச்செல்வது சாதாரண விசயமில்லை, அதை ஒரு தமிழ் நிறுவனம் சாதித்திருப்பது நாம் எல்லோரும் பெருமை படக்கூடிய விசயமே...

கடந்த முப்பது வருடங்களாக தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வெளிநாட்டில் குறிப்பாக அமீரகத்தில் ' ஏ மதராசி என்று அலட்சியமாக அழைத்தவனெல்லாம் ஆப் மதராசி ஹை?! (வரி உபயம்:அண்ணாச்சி) என்று ஆச்சரியமாகக் கேட்க வைத்தற்கு காரணமான ஒரு பெருமை மிக்க நிறுவனமான ETA குழுமத்தின் கிரீடத்தில், இந்த விருது மேலும் ஒரு வைரமாக மிளிருமென்றால் அது மிகையாகாது.

25 comments:

நட்புடன் ஜமால் said...

\\ ஏ மதராசி என்று அலட்சியமாக அழைத்தவனெல்லாம் ஆப் மதராசி ஹை?! என்று ஆச்சரியமாகக் கேட்க வைத்தற்கு காரணமான ஒரு பெருமை மிக்க நிறுவனமான ETA குழுமத்தின் கிரீடத்தில் இந்த விருது மேலும் ஒரு வைரமாக மிளிருமென்றால் அது மிகையாகாது.\\

மிக(ச்)சரியே

Suresh said...

அருமை தோழா தொடர்ந்து எழுதுங்கள் ..... படிக்க நாம் இருக்கோம்...

follower ayutaen

எம்.எம்.அப்துல்லா said...

விருது பெற்றது பெரிய விஷயம். சந்தேகமே இல்லை. பாராட்டுகள். ஆனால் உயர் பணியில் இருப்பவர்களுக்கு அள்ளிக்குடுப்பதும் அடிப்படைத் தொழிலாளர்களுக்கு கிள்ளிக் குடுப்பதுமான அவர்களது சம்பளக் கொள்கையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

seik mohamed said...

me the 4

seik mohamed said...

me the 5th

seik mohamed said...

பாராட்டுகள.
பாராட்டுகள..
பாராட்டுகள...

seik mohamed said...

///எம்.எம்.அப்துல்லா said...
விருது பெற்றது பெரிய விஷயம். சந்தேகமே இல்லை. பாராட்டுகள். ஆனால் உயர் பணியில் இருப்பவர்களுக்கு அள்ளிக்குடுப்பதும் அடிப்படைத் தொழிலாளர்களுக்கு கிள்ளிக் குடுப்பதுமான அவர்களது சம்பளக் கொள்கையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
///.
100% true

புதியவன் said...

வாழ்த்துக்கள்...

கண்ணா.. said...

\\\\ பார்சா குமார‌ன் said...
///எம்.எம்.அப்துல்லா said...
விருது பெற்றது பெரிய விஷயம். சந்தேகமே இல்லை. பாராட்டுகள். ஆனால் உயர் பணியில் இருப்பவர்களுக்கு அள்ளிக்குடுப்பதும் அடிப்படைத் தொழிலாளர்களுக்கு கிள்ளிக் குடுப்பதுமான அவர்களது சம்பளக் கொள்கையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
///.
100% true
\\\\\\

வழிமொழிகிறேன்............

அருமையான பதிவு......கலக்குங்க......

ரிஷி (கடைசி பக்கம்) said...

accidentally i know in abudabhi

Salary structure is very poor in this company.

Apart from this I don't know much.

R.Gopi said...

தென்பாண்டி தங்கமே, தென்தமிழ்நாட்டு சிங்கமே

"தல" இந்த பதிவும் செய்தியும் சூப்பர்.

அப்படியே என்னோட ப்ளாக்சையும் கொஞ்சம் பாருங்க.

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

Anonymous said...

அன்பின் ராஸா

பதிவுகளையே திருடுபவர்கள் மத்தியில் சலாஹூதீன் காக்காவுக்கு நடந்த பாராட்டு விழாவில் உங்களையும் என்னையும் தவிர வேறு பதிவர்கள் கலந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும் நான் பேசிய வார்த்தைகளைக் கூடக் குறிப்பிட்டு எழுதியிருக்கும் உங்க்ள் பண்பு உங்கள் மீதான மதிப்பை உயர்த்துகிறது. வாழ்க வளமுடன்! வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் நிறுவனத்திற்கும்

ஹேமா said...

பாராட்டுக்கள் ராஸா.
வாழ்த்துக்களும் கூட.

கீழை ராஸா said...

//நட்புடன் ஜமால் said...
மிக(ச்)சரியே//

நன்றி ஜமால்...

கீழை ராஸா said...

//Suresh said...
அருமை தோழா தொடர்ந்து எழுதுங்கள் ..... படிக்க நாம் இருக்கோம்...

follower ayutaen//

அதை நம்பித்தானே எழுதுறோம்..நன்றி சக்கரை கட்டி சுரேஸ்

கீழை ராஸா said...

//எம்.எம்.அப்துல்லா said...
விருது பெற்றது பெரிய விஷயம். சந்தேகமே இல்லை. பாராட்டுகள்.//
நன்றி அப்துல்லா பாய்...

கீழை ராஸா said...

//எம்.எம்.அப்துல்லா said...
விருது பெற்றது பெரிய விஷயம். சந்தேகமே இல்லை. பாராட்டுகள்.//
நன்றி அப்துல்லா பாய்...

கீழை ராஸா said...

//பார்சா குமார‌ன் said...
பாராட்டுகள.
பாராட்டுகள..
பாராட்டுகள...//

நன்றி நன்றி நன்றி...!

கீழை ராஸா said...

//புதியவன் said...
வாழ்த்துக்கள்...//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

கீழை ராஸா said...

நன்றி கண்ணா...

கீழை ராஸா said...

//R.Gopi said...
தென்பாண்டி தங்கமே, தென்தமிழ்நாட்டு சிங்கமே

"தல" இந்த பதிவும் செய்தியும் சூப்பர்.

அப்படியே என்னோட ப்ளாக்சையும் கொஞ்சம் பாருங்க.//

வர்றேன் தலை...உங்க வருகைக்கு நன்றி

கீழை ராஸா said...

//ஆசிப் மீரான் said...
அன்பின் ராஸா

பதிவுகளையே திருடுபவர்கள் மத்தியில் சலாஹூதீன் காக்காவுக்கு நடந்த பாராட்டு விழாவில் உங்களையும் என்னையும் தவிர வேறு பதிவர்கள் கலந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும் நான் பேசிய வார்த்தைகளைக் கூடக் குறிப்பிட்டு எழுதியிருக்கும் உங்க்ள் பண்பு உங்கள் மீதான மதிப்பை உயர்த்துகிறது. வாழ்க வளமுடன்! வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் நிறுவனத்திற்கும்//

அன்பின் அண்ணாச்சி...
ஒரு மூத்த பதிவரும், என் மதிப்பிற்குரியவருமான அண்ணாச்சி மூலம் இப்படி ஒரு பின்னூட்டம் கிடைக்குமென்று நான் எதிர்பார்க்க வில்லை...நன்றி அண்ணாச்சி, உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்.

கீழை ராஸா said...

//ஹேமா said...
பாராட்டுக்கள் ராஸா.
வாழ்த்துக்களும் கூட.//
வாங்க அக்கா..உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

Esywara said...

oru tamil niruvanam saathanai padaippathu en ponra ilaiyargalukkku periya utvegathai tarugirathu...

anyway ungal blog saavadi...
very informative and fun a trait that I gotta learn.

ஸாதிகா said...

//கடந்த முப்பது வருடங்களாக தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வெளிநாட்டில் குறிப்பாக அமீரகத்தில் ' ஏ மதராசி என்று அலட்சியமாக அழைத்தவனெல்லாம் ஆப் மதராசி ஹை?! (வரி உபயம்:அண்ணாச்சி) என்று ஆச்சரியமாகக் கேட்க வைத்தற்கு காரணமான ஒரு பெருமை மிக்க நிறுவனமான ETA குழுமத்தின் கிரீடத்தில், இந்த விருது மேலும் ஒரு வைரமாக மிளிருமென்றால் அது மிகையாகாது.//
அல்ஹம்துலில்லாஹ்!

Related Posts with Thumbnails